Ajith Kumar - Chennai [file image]
நடிகர் அஜித் நடிப்பில் இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் “விடாமுயற்சி” திரைப்படத்தில் ரெஜினா, திரிஷா, சஞ்சய் தத், உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்த வருவதாக கூறப்படுகிறது.
அஜித் ரசிகர்கள் அனைவரும் இந்த திரைப்படத்திற்கான அப்டேட்டுக்காக ஆவலுடன் காத்திருக்கிறார்கள். இந்நிலையில், ஷூட்டிங் அஜர்பைஜான் நாட்டில் பல பகுதிகளில் நடைபெற்று வந்த நிலையில், கிட்டத்தட்ட ஒன்றரை மாத ஷெட்யூலுக்கு பிறகு சிறிய விடுமுறைக்காக நடிகர் அஜித்குமார் சென்னை திரும்பியுள்ளார்.
சமீபத்தில், முக்கிய ஸ்டண்ட் ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்பட்டு வந்தது தீபாவளிக்கு கூட, வீடு திரும்பாமல் படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வந்தது. அண்மையில் கூட படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது.
இந்நிலையில்,அஜர்பைஜானில் முதல் ஷெட்யூலை முடித்துவிட்டு இன்று அதிகாலை சென்னை விமான நிலையத்தில் வருகை தந்த நடிகர் அஜித் குமாரின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
அடுத்தகட்ட படப்பிடிப்பிற்காக படக்குழு துபாய் செல்ல உள்ளதாக கூறப்படுகிறது. அங்கு சில முக்கியமான காட்சிகள் படமாக்க திட்டமிடப்பட்டுள்ளது. படத்தின் முழு படப்பிடிப்பும் அடுத்த ஆண்டு ஜனவரிக்குள் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஹாலிவுட் தரத்தில் விடாமுயற்சி படம்! படப்பிடிப்பு தள புகைப்படம் – வீடியோ வெளியீடு!
லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்க, நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். படத்தில் அஜித்தை தவிர ரெஜினா, திரிஷா, சஞ்சய் தத், உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக காத்திருப்போம்.
டெல்லி : நேற்று ( ஏப்ரல் 22) காஷ்மீர் பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம்…
புதுச்சேரி : சிஎஸ்கே அணியின் தொடர் தோல்வி குறித்து கருத்து தெரிவித்த அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் வரும்…
டெல்லி : நேற்று (ஏப்ரல் 22) பிற்பகல் 3 மணியளவில் ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பைசரான் பள்ளத்தாக்கில், பஹல்காம் பகுதியில் நேற்று பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில்…
பஹல்காம் : நேற்று ஜம்மு-காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் உள்ள பைசரான் பள்ளத்தாக்கில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதல் சம்பவத்தில்…
பஹல்காம் : நேற்று ஜம்மு-காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் உள்ள பைசரான் பள்ளத்தாக்கில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதல்…