சினிமாவில் கால்பதித்த ஆரம்ப கால கட்டத்தில் பல சோதனைகளையும், பல அவமானங்களையும் தாங்கி தனது விடாமுயற்சியின் மூலம் தற்போது தமிழ் சினிமா பாக்ஸ் ஆபிஸின் முடி சூடா மன்னனாக திகழ்பவர் தளபதி விஜய்.
unknown nodeஇவரின் சினிமா பயணங்களை பற்றிய புத்தகம் ஒன்று “விஜய் ஜெயித்த கதை ” என்ற பெயரில் ஜனவரி மாதம் வெளியாகி இருந்தது. இந்த புத்தகத்தை சபீதா ஜோசப் என்ற எழுத்தாளரால் எழுதப்பட்டு, ரசிகர்கள் பலராலும் வாங்கி படிக்கப்பட்டது.
திருநெல்வேலியில் நாளை நமதே என்ற பெயரில் புத்தக கண்காட்சி நடைபெற்றது.இதில் தமிழகத்தில் சரித்திரம் படைத்த பல தலைவர்களின் புத்தகத்திற்க்கு மத்தியில் தளபதி விஜயின் திரையுலகப் பயணம் பற்றிய “விஜய் ஜெயித்த கதை” புத்தகமும் வைக்கப்பட்டிருந்தது.
இந்த புத்தகத்தில் தளபதி விஜயின் நடிப்பில் முதலில் உருவாகி 1992 ல் வெளியான நாளைய தீர்ப்பு படத்திலிருந்து சமீபத்தில் வெளியான மெர்சல் படம் வரை, அவர் கடந்து வந்த 25 வருட வெற்றி பயணத்தை பற்றி குறிப்பிடபட்டிருந்தது.
மேலும் செய்திகளுக்கு தினசுவடுடன் இணைந்திருங்கள்.