நடுவில் ரோட்டில் நின்ற நடிகையின் கார்! இறங்கி விஜயகாந்த் செய்த விஷயம்?

Published by
பால முருகன்

Vijayakanth : நடிகையின் கார் நடு ரோட்டில் நின்றபோது விஜயகாந்த் பெரிய விஷயம் ஒன்றை செய்துள்ளார்.

கேப்டன் விஜயகாந்த் பிரபலங்களுக்கு செய்த உதவிகளை பற்றிய தகவல் தினம் தினம் வெளிவந்து அவரை பாராட்ட வைத்து வருகிறது என்றே கூறலாம். அந்த அளவிற்க்கு விஜயகாந்த் உயிரோடு இருந்த சமயத்தில் பல உதவிகளை செய்து இருக்கிறார். அப்படி தான் ஒரு முறை வானத்தை போல படத்தின் படப்பிடிப்பின் போது நடிகை கௌசல்யா கார் நின்ற போது விஜயகாந்த் பெரிய விஷயம் ஒன்றை செய்துள்ளார்.

வானத்தை போல படத்தில் விஜயகாந்துடன்  நடிகை கௌசல்யா முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். இந்த படத்தின் போது விஜயகாந்திற்கு நடிகை கௌசல்யாவுக்கு அந்த அளவிற்கு பழக்கம் கூட இல்லயாம். ஒரு முறை படத்தின் படப்பிடிப்பு மழையில்  நடந்து கொண்டு இருந்ததாம். படப்பிடிப்பு எல்லாம் முடிந்து கௌசல்யா சீக்கிரமாகவே காரில் சென்றுவிட்டாராம்.

அந்த சமயம் பார்த்து கௌசல்யா சென்ற அந்த கார் பஞ்சர் ஆகிவிட்டதாம். மழையும் மிகவும் வேகமாக பெய்துகொண்டு இருந்ததாம். அப்போது படப்பிடிப்பு முடிந்து விஜயகாந்த் கொஞ்சம் லேட்டாக தான் பின்னாடி காரில் வந்தாராம். முன்னாடி கௌசல்யா நின்ற காரை பார்த்துவிட்டு என்னாச்சு என்ற விவரத்தை கேட்டு தெரிந்தாராம்.

அதன்பிறகு ட்ரைவர் பஞ்சர் ஆன விஷயத்தை அவரிடம் கூறினாராம். பின் தான் வந்த காரை ஓரமா நிறுத்திவைத்துவிட்டு அவருடைய கார் ரெடி ஆகி முடிக்கட்டும் அதன் பிறகு நாம் செல்லலாம் என்று தான் வந்த காரின் டிரைவரிடம் கூறிவிட்டாராம். கிட்டத்தட்ட பல மணி நேரங்கள் அந்த காரை சரி செய்ய நேரம் ஆனதாம். கௌசல்யா கார் ரெடியானது வரை  அங்கே விஜயகாந்த் நின்றாராம். ஆனால், அந்த சமயம் எல்லாம் அவ்வளவு பழக்கமே இல்லாமல் அவர் நின்றது மிகப்பெரிய விஷயம் என இந்த தகவலை கௌசல்யா தெரிவித்துள்ளார்.

Recent Posts

“ஹிந்தி தான் பேசுவேன்” அடம்பிடித்த பெண் ஊழியர்! மகாராஷ்டிராவில் வெடித்த மொழி சர்ச்சை!

மகாராஷ்டிரா :தென்னிந்தியாவில் ஏற்கனவே, மொழிப் போர் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. மத்திய அரசு  மும்மொழிக்கொள்கையை அமல்படுத்த தீவிரம் காட்டி வருகிறது. இது…

11 hours ago

இனி இப்படிதான்! ஊட்டி, கொடைக்கானல் செல்வோர் கவனத்திற்கு!! ஐகோர்ட் போட்ட அதிரடி உத்தரவு.!

கொடைக்கானல்: ஊட்டி, கொடைக்கானல் சுற்றுலா வாகனங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் புதிய கட்டுப்பாடு விதித்து உத்தரவிட்டுள்ளது. கோடை விடுமுறையை முன்னிட்டு…

11 hours ago

“வெங்கடேஷ் ஐயருக்குப் பதிலாக ரஹானே”… கேப்டனை மாற்றியது ஏன்? கேகேஆர் விளக்கம்.!

டெல்லி : ஐபிஎல் 2025 மார்ச் 22 முதல் தொடங்க உள்ளது, முதல் போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைத்தனத்தில்…

13 hours ago

பட்ஜெட்டில் முக்கிய ‘அடையாள’ மாற்றம் : தமிழுக்கு ‘ரூ’ முக்கியத்துவம்!

சென்னை : நாளை தமிழக அரசு சட்டப்பேரவையில் மாநில பட்ஜெட் 2025 - 2026-ஐ தாக்கல் செய்ய உள்ளது. முதலமைச்சர்…

14 hours ago

அவரு கண்ணுல தெரியுது! 2027 உலகக்கோப்பைக்கு ஸ்கெட்ச் போட்ட ரோஹித்! ரிக்கி பாண்டிங் கணிப்பு!

டெல்லி : ரோஹித் சர்மா சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் இருந்து இப்போது ஓய்வு பெறவில்லை என திட்டவட்டமாக தெரிவித்த நிலையில்.…

15 hours ago

நாளை தமிழக பட்ஜெட் : ஆய்வறிக்கையை வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின்.!

சென்னை : தமிழ்நாடு அரசின் 2025-26 நிதியாண்டுக்கான பட்ஜெட், நிதியமைச்சர் தங்கம் தென்னரசு நாளை (மார்ச் 14, 2025) காலை…

16 hours ago