thalapathy 68 shoot [File Image]
லியோ படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் விஜய் அடுத்ததாக தன்னுடைய 68-வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். கஸ்டடி திரைப்படத்தை தொடர்நது இயக்குனர் வெங்கட் பிரபு விஜையின் 68-வது படத்தை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். இந்த திரைப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.
இந்த திரைப்படத்தில் பிரபுதேவா, பிரசாந்த், லைலா, ஸ்னேகா, மீனாட்சி, மோகன், பிரேம் ஜி, உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு பூஜையுடன் கடந்த அக்டோபர் மாதம் தொடங்கப்பட்டது. பூஜைக்கான வீடியோவும் சமீபத்தில் வெளியிடப்பட்டது.
தளபதி 68 படத்தின் வில்லன் யார் தெரியுமா? பிஸியான நடிகரை லாக் செய்த வெங்கட் பிரபு!
இந்த நிலையில், படத்தின் பாடல் காட்சிகளை எல்லாம் படக்குழு படமாக்கி வரும் நிலையில், 2 பாடல்களை படமாக்கப்பட்டுள்ளதாக முன்னதாக தகவல்கள் கசிந்தது. லியோ படத்தின் வெற்றி விழா நேற்று முன்தினம் சென்னையில் நடைபெற்ற காரணத்தால் தளபதி 68 படப்பிடிப்பிற்காக விஜய் தாய்லாந்து செல்லவில்லை படக்குழு மட்டும் அங்கு சென்றது.
பிறகு சென்னையில் நடைபெற்ற லியோ வெற்றி விழாவில் கலந்துகொண்ட விஜய் ரசிகர்களுக்கு குட்டி ஸ்டோரி மட்டும் அட்வைஸ் கூறினார். அதன் பிறகு 1 நாள் மட்டும் ஓய்வு எடுத்துவிட்டு இன்று காலை தளபதி 68 படத்தின் படப்பிடிப்புக்காக கிளம்பி சென்னை விமான நிலையத்தில் இருந்து பாங்காக் செல்கிறார்.
சினிமாவை சினிமாவாக மட்டும் பாருங்கள் – நடிகர் விஜய் வேண்டுகோள்
விமான நிலையத்தில் அவர் இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. பாங்காக்கில் தளபதி 68 படத்திற்கான சண்டைக்காட்சிகள் மும்மரமாக எடுக்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இன்னும் 5 நாட்கள் தொடர்ந்து இந்த சண்டை காட்சியை தான் படக்குழு படமாக்க திட்டமிட்டுள்ளதாம். விரைவில் தளபதி 68 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் டைட்டிலுடன் வெளியிடப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
மகாராஷ்டிரா :தென்னிந்தியாவில் ஏற்கனவே, மொழிப் போர் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. மத்திய அரசு மும்மொழிக்கொள்கையை அமல்படுத்த தீவிரம் காட்டி வருகிறது. இது…
கொடைக்கானல்: ஊட்டி, கொடைக்கானல் சுற்றுலா வாகனங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் புதிய கட்டுப்பாடு விதித்து உத்தரவிட்டுள்ளது. கோடை விடுமுறையை முன்னிட்டு…
டெல்லி : ஐபிஎல் 2025 மார்ச் 22 முதல் தொடங்க உள்ளது, முதல் போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைத்தனத்தில்…
சென்னை : நாளை தமிழக அரசு சட்டப்பேரவையில் மாநில பட்ஜெட் 2025 - 2026-ஐ தாக்கல் செய்ய உள்ளது. முதலமைச்சர்…
டெல்லி : ரோஹித் சர்மா சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் இருந்து இப்போது ஓய்வு பெறவில்லை என திட்டவட்டமாக தெரிவித்த நிலையில்.…
சென்னை : தமிழ்நாடு அரசின் 2025-26 நிதியாண்டுக்கான பட்ஜெட், நிதியமைச்சர் தங்கம் தென்னரசு நாளை (மார்ச் 14, 2025) காலை…