thalapathy 68 new update [Image source : file image ]
நடிகர் விஜய் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார் . இந்த திரைப்படம் வரும் அக்டோபர் மாதம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது . இந்த திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் அடுத்ததாக யாருடைய இயக்கத்தில் தனது 68வது திரைப்படத்தில் நடிக்க உள்ளார் என்ற தகவல் அடிக்கடி இணையத்தில் பரவி வருகிறது.
குறிப்பாக, கடந்த சில நாட்களாகவே நடிகர் விஜயின் 68-வது திரைப்படத்தை பிரபல இயக்குனர் அட்லீ இயக்குவது கிட்டத்தட்ட உறுதியாக விட்டது என்று சினிமா வட்டாரத்தில் தகவல்கள் பரவி வந்தது. அதனை தொடர்ந்து தற்போது மீண்டும் ஒரு புதிய தகவல் பரவி வருகிறது.
அது என்னவென்றால், அட்லி ஜவான் படத்தை தொடர்ந்து மீண்டும் பாலிவுட் படம் ஒன்றை இயக்கவுள்ளாராம். எனவே, விஜயன் 68-வது திரைப்படத்தை அட்லீ இயக்கவில்லையாம். அவருக்கு பதிலாக அஜித்தை வைத்து மங்காத்தா, சிம்புவை வைத்து மாநாடு போன்ற படங்களை இயக்கிய வெங்கட் பிரபு தான் விஜயின் 68 வது திரைப்படத்தை இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கவுள்ளதாகவும் கூடுதலான தகவல்.
அதைப்போலவே, இதுவரை தளபதி 68 உடன் இணைக்கப்பட்ட இயக்குனர்களில் தெலுங்கு திரைப்பட இயக்குனர் கோபிசந்த் மலினேனி மற்றும் சமீபத்தில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் கார்த்திக் சுப்பராஜ் ஆகியோர் அடங்குவர். எனவே, அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்தால் மட்டும் தான் யார் தளபதி 68 படத்தை இயக்குவார் என்பது தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெய்ப்பூர் : ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெறும்…
நெதர்லாந்த் : நடிகர் அஜித் குமார் தற்போது நெதர்லாந்தில் நடைபெற்று வரும் GT4 ஐரோப்பிய கார் ரேஸில் பங்கேற்று வருகிறார்.…
ஜெய்ப்பூர் : ஐபிஎல் தொடரின் 59வது போட்டியில், இன்று ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில், சஞ்சு சாம்சன் தலைமையிலான…
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள ஒரு பகுதியில், நேற்று ஒரு கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரமாக…
ததஞ்சாவூர்: தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் அருகே நெய்வேலி தென்பதியில் உள்ள ஒரு பட்டாசு குடோனில்ஏற்பட்ட வெடி விபத்தில் 2…
சென்னை : தமிழகத்தில் சாலையோரங்களில் உள்ள கிணறுகள் மற்றும் பள்ளங்கள் குறித்து ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர்…