நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு வெளியாகும் விஜய் சேதுபதி படம்…உற்சாகத்தில் ரசிகர்கள்.!!

vijay sethupathi

வெங்கடகிருஷ்ண ரோகந்த் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதியின் நீண்ட கால தாமதமான தமிழ் திரைப்படம் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ இந்த திரைப்படம் இறுதியாக திரைக்கு வர தயாராகி வருகிறது. இந்த ஆண்டு டிசம்பரில் படத்தை வெளியிட  படக்குழு திட்டமிடிருந்த நிலையில், தற்போது அதற்கு முன்பே வெளியாகிறது.

அதன்படி, இந்த திரைப்படம் வரும் மே 19, 2023 அன்று வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. படம் ஒரு வித்தியாசமான நபரின் அடையாள நெருக்கடியைச் சுற்றி வருவதாகக் கூறப்படுகிறது. அவர் எப்படி தமிழ்நாட்டை அடைந்து தனது வேர்களைக் கண்டுபிடிக்கப் புறப்படுகிறார் என்பதுதான் கதையின் மையக்கரு.

இப்படத்தில் விஜய் சேதுபதி பல வேடங்களில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இயக்குனர்கள் மகிழ் திருமேனி மற்றும் மோகன்ராஜா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இப்படத்தில் மேகா ஆகாஷ், விவேக், ரித்விகா ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். நிவாஸ் கே பிரசன்னா படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு நீண்ட காலத்திற்கு முன்பே முடிவடைந்ததாகவும், நிதி பிரச்சனையால் படப்பிடிப்பில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சிக்கல்கள் இப்போது தீர்க்கப்பட்டு, படம் மே 19, 2023 அன்று திரைக்கு வரும். இப்படத்தை சக்தி ஃபிலிம் பேக்டரி வெளியீடுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்