நடிகர் விஜய் தேவரகொண்டா வருடம் வருடம் கிருஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு ரசிகர்களுக்கு ஏதாவது பரிசு அளிக்கும் வழக்கத்தை வைத்துள்ளார். தனது கடைசிப் பெயரிலிருந்து தேவரவையும், சாண்டா கிளாஸில் இருந்து சாண்டாவையும் இணைத்து, சில வருடங்களுக்கு முன்பு ‘தேவராசாந்தா’ என்ற பாரம்பரியத்தைத் தொடங்கினனார்.
(#தேவரசந்தா) அதன்மூலம், விஜய் தேவரகொண்டா தனது ரசிகர்களுக்கு கிருஸ்துமஸ் பண்டிகையை சிறப்பாக்குவதற்காக ஒவ்வொரு ஆண்டும் புதிய மற்றும் அற்புதமான பரிசுகளுடன் வருகிறார். அந்த வகையில், இந்த ஆண்டு #Deverasanta2022 திட்டம் பெரியதாக உள்ளது, ஏனெனில் 100 ரசிகர்களுக்கு அனைத்து செலவையும் செலுத்தி பயணங்களை ஏற்பாடு செய்ய அவர் திட்டமிட்டுள்ளார்.
இந்த அறிவிப்பு, இயல்பாகவே, அவரது ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து அவர் டிவிட்டரில் கூறியிருப்பதாவது, “”#தேவேராசாந்தா, 5 வருடங்களுக்கு முன்பு நான் ஆரம்பித்த ஒரு பாரம்பரியம். இந்த வருடம் எனக்கு இதுவரை நல்ல யோசனை உள்ளது.
இதையும் படியுங்களேன்- ஒருத்தர் கூட வரலையா..? படம் பார்க்க நினைத்து ஏமாற்றமடைந்த நயன்தாரா.!
உங்களில் 100 பேரை அனைத்து செலவுகளும் செலுத்தி விடுமுறைக்கு அனுப்ப உள்ளேன். சேருமிடத்தைத் தேர்ந்தெடுக்க எனக்கு உதவுங்கள். என பதிவிட்டு அதன் கீழே இந்திய மலை பகுதிகள், இந்திய கடற்கரை பகுதிகள், இந்திய கலாசார சுற்றுலா, இந்தியாவின் பாலைவனம் ஆகிய சுற்றுலாவுக்கான 4 பொதுவான இடங்களை குறிப்பிட்டு உள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் சரியான இடத்தைத் தேர்வுசெய்ய வாக்களித்து வருகிறார்கள்.
சென்னை : தொலைக்காட்சி நிலையத்தின் "இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா" மற்றும் சென்னைத் தொலைக்காட்சியின் பொன்விழா கொண்டாட்டங்கள் இன்று…
சேலம் : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு விக்கிரவாண்டி பகுதியில் வரும் அக்டோபர் 27-ஆம் தேதி நடைபெற…
சென்னை : வங்க கடலில் இதற்கு முன்னர் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று அதிகாலை கரையைக் கடந்தது.…
தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதைப்போல, மத்தியகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளின்…
வாஷிங்க்டன் : இஸ்ரேலுக்கும், ஹமாஸுக்கும் இடையே கடந்த ஒரு வருடமாகப் போர் நடைபெற்று வருகிறது. இதில், இஸ்ரேல் தொடுத்த தாக்குதலில்…
விழுப்புரம் : நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் இன்று விழுப்புரத்தில் நடைபெற்ற கட்சி நிகழ்வில் கலந்து கொண்டு பின்னர்…