தெலுங்கு பாட்டே வேண்டாம்! கில்லி படத்தில் சொல்லி அடித்த வித்யாசாகர்!

Published by
பால முருகன்

Ghilli : கில்லி படத்தில் பாடல்கள் எல்லாம் ஹிட் ஆகும் என தயாரிப்பாளரிடம் வித்யாசாகர்  உறுதியாக கூறி செய்து காட்டியுள்ளார்.

தெலுங்கில் மகேஷ் பாபு  நடிப்பில் வெளியாகி ஹிட்டான ‘ஒக்கடு’ படத்தை தமிழில் நடிகர் விஜய்யை வைத்து கில்லி என்ற பெயரில் இயக்குனர் சரண் ரீமேக் செய்து இருந்தார். இந்த கில்லி திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று விஜயின் மார்க்கெட்டை உயர்த்த பெரிய உதவியாக அமைந்தது என்றே கூறலாம். ஒக்கடு படத்தை விட கில்லி படத்திற்கு தான் அதிகமான வரவேற்பும் கிடைத்தது.

இந்த கில்லி படம் தான் தமிழ் சினிமாவில் முதன் முதலாக 50 கோடிகளுக்கு மேல் வசூல் செய்த திரைப்படமும் கூட. அந்த சமயம் முதல் தற்போது வரை இந்த படத்திற்கு என்று தனி ரசிகர்கள் கூட்டமே இருக்கிறது என்றே கூறலாம். கடந்த ஏப்ரல் 20-ஆம் தேதி கூட இந்த திரைப்படம் திரையரங்குகளில் மீண்டும் ரீ -ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.

படத்தை திரையரங்குகளில் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். இந்த படம் வெற்றியடைந்ததுக்கு கதை ஒரு பக்கம் காரணம் என்றால் மற்றோரு காரணம் படத்தின் இசை என்று கூறலாம். இந்த படத்தின் இசை அந்த அளவிற்கு படத்திற்கு பக்க பலமாக இருந்தது என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு நல்ல பாடல்களையும், பின்னணி இசையையும் வித்யாசாகர் கொடுத்து இருந்தார்.

இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட இசையமைப்பாளர் வித்யாசாகர்  கில்லி படத்தின் பாடல்கள் உருவான விதம் பற்றி பேசியுள்ளார். இது குறித்து பேசிய அவர் ” முதலில் கில்லி படத்திற்கு நான் இசையமைக்க ஒப்பந்தம் ஆன போது தயாரிப்பாளர் எ.எம்.ரத்னம் என்னிடம் ஒக்கடு படத்தில் இருந்த 2 பாடல்களை மட்டும் அப்படியே எடுத்து தமிழில் போடவேண்டும் என்று கூறினார்.

எனக்கு அப்படி எடுத்து பண்ணுவதில் சுத்தமாக விருப்பம் இல்லை அது தெலுங்கு பாட்டு தெலுங்கு பாட்டு வேண்டாம் நாம் தமிழில் புதிதாக பண்ணலாம் என்று கூறினேன். அதற்கு தயாரிப்பாளர் எ.எம்.ரத்னம் என்ன சார் இப்படி சொல்றீங்க? தெலுங்கில் அந்த பாடல்கள் எல்லாம் பெரிய ஹிட் என்று கூறினார். அதற்கு நான் அவரிடம் நீங்கள் தமிழில் செய்ய போவது அதனை விட பெரிய அளவில் ஹிட் ஆகா போகிறது காத்திருந்து பாருங்கள் என்று கூறினேன்.

நான் இவ்வளவு சொல்லியும் படத்தின் தயாரிப்பாளருக்கு கொஞ்சம் கூட நம்பிக்கையே இல்லை. பிறகு எனக்காக அவர் ஒற்றுக்கொண்டார். நான் சொன்னது போல நல்ல பாடல்களை படத்தில் கொடுத்தேன். அப்படி போடு பாடலை எல்லாம் 30 நிமிடத்தில் முடித்து கொடுத்துவிட்டேன். பாடலும் இப்போது வரை கொண்டாடப்படுவது மகிழ்ச்சியை கொடுக்கிறது” எனவும் வித்யாசாகர்  கூறியுள்ளார்.

Published by
பால முருகன்

Recent Posts

போப் பிரான்சிஸ் உடல் நல்லடக்கம்! உலக நாட்டு தலைவர்கள் நேரில் மரியாதை!

வாடிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் மறைந்த போப் பிரான்சிஸின் இறுதி சடங்கு இன்று (ஏப்ரல் 26) காலை வாடிகான்…

8 hours ago

“ஓட்டு மட்டுமே குறிக்கோள் இல்லை., மக்களோடு பேசுங்கள்!” விஜய் கொடுத்த ‘குட்டி’ அட்வைஸ்!

கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி கருத்தரங்கம் தொடங்கி நடைபெற்று வருகிறது.…

8 hours ago

ஈரான் துறைமுகத்தில் பயங்கர வெடி விபத்து! 300க்கும் மேற்பட்டோர் காயம்!

தெஹ்ரான் : தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் ஷாகித் ராஜீ துறைமுகம் செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று திடீரென…

9 hours ago

தவெக பூத் கமிட்டி கருத்தரங்கில் சிறிய தீ விபத்து? “ஒதுங்கி நில்லுங்கள்!” விஜய் அட்வைஸ்!

கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார்…

9 hours ago

தவெக பூத் கமிட்டி கருத்தரங்கு.., என்ன பேசப்போகிறார் விஜய்?

கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் தேர்தல் வாக்குசாவடி முகவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற உள்ளது.…

10 hours ago

கட்டாய கடன் வசூல்., 3 ஆண்டுகள் சிறை! புதிய சட்ட மசோதா விவரங்கள் இதோ…

சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…

12 hours ago