Vetrimaaran- Shankar[file image]
இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய்சேதுபதி, கெளதம் மேனன், பிரகாஷ் ராஜ், பவானி ஸ்ரீ, சேதன், கிஷோர் குமார் ஜி ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் விடுதலை. இதன் முதல் பாகம் கடந்த மார்ச் மாதம் 31-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த படத்திற்கு மாபெரும் வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில், இந்த வெற்றியை தொடர்ந்து இதன் இரண்டாம் பாகத்திற்கான எதிர்பார்ப்பு அதிகமானது. சமீபத்தில், நடிகர் சூரி ‘விடுதலை 2’ படத்தின் படப்பிடிப்பை மீண்டும் தொடங்கியுள்ளதை வீடியோ மூலம் படக்குழு அறிவித்தனர்.
திண்டுக்கல் அருகே சிறுமலை காடுகளில் மீண்டும் படப்பிடிப்பை தொடங்கிய படக்குழு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இந்த திரைப்படம் குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, இரண்டாம் பாகத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக அதிக மஞ்சு வாரியர் நடிக்க உள்ளதாகவும் படத்தில் வரும் பிளேஷ்பேக் காட்சிகளில் கணவன் மனைவியாக நடிக்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது.
மேலும் அவர்களின் கதாபாத்திரம் 1960களில் அமைக்கப்படவுள்ளதால் ‘டி ஏஜிங்’ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இளமையாக காட்ட இயக்குனர் வெற்றிமாறன் முடிவு செய்துள்ளார். இதற்கு முன்னதாக, இந்தியன் 2 படத்தில் இயக்குனர் ஷங்கர் இது போன்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கமலஹாசனை இளமையாக காட்ட அந்த தொழில் தொழில்நுட்பத்தை பயன்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
ஜெய்பீம் படத்தை தொடர்ந்து அடுத்த உண்மை சம்பவத்தில் சூர்யா!
தற்போது, அவரை தொடர்ந்து இயக்குனர் வெற்றிமாறன் இந்த படத்திற்காக அந்த வேலையை செய்து வருகிறார். இப்பொது, சிறுமலையில் விஜய் சேதுபதி மற்றும் சூரியின் போர்ஷன்கள் படமாக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இளையராஜாவின் இசையில், வேல்ராஜ் ஒளிப்பதிவில் ஆர்.எஸ்.இன்ஃபோடெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள ‘விடுதலை’ இரண்டாம் பாகம் மீண்டும் திரையில் காண்பதற்கு ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
சென்னை : நடிகர் அஜித் குமார் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' திரைப்படத்தின் டீசர் பிப்ரவரி 28, 2025 அன்று வெளியாகும்…
சென்னை : முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று காலை தனது முகநூல் பக்கத்தில் தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்கிற முறையில், 2026-ஆம் ஆண்டு…
டெல்லி : இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி 1984 ஆம் ஆண்டு, அக்டோபர் 31 அன்று தனது சீக்கிய…
ராவல்பிண்டி : 2025-ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபியின் 7-வது போட்டி இன்று ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவிருந்தது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியா…
துபாய் : கடந்த பிப்ரவரி 23-ஆம் தேதி நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் அணியும், இந்திய கிரிக்கெட் அணியும் மோதியது.…
சேலம் : பாமக கௌரவ தலைவரும், பாமக சட்டமன்ற குழுத் தலைவருமான ஜி.கே.மணியின் இல்ல திருமண விழா நாளை காலை…