3 பாகமாக உருவாகும்‘வேள்பாரி’.. இயக்குனர் ஷங்கர் கொடுத்த புதிய அப்டேட்.!!

Published by
கெளதம்

இயக்குனர் ஷங்கர் : இந்தியன் 2 ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் இயக்குனர் ஷங்கர் “வேள் பாரி” சரித்திர நாவலை 3 பாகமாக எடுக்க போவதாக ஒரு புதிய அப்டேட் ஒன்றை கூறியுள்ளார். இயக்குனர் ஷங்கர் – நடிகர் கமல் கூட்டணியில் உருவாகியிருக்கும் இந்தியன் – 2 திரைப்படம் நாளை (வெள்ளிக்கிழமை) உலகம் முழுவதும் வெளியாகவிருக்கிறது.

5 வருடங்களாக உருவாகி வரும் இந்த பிரம்மாண்ட படம் 2ஆவது மற்றும் 3ஆவது பாகங்களாக எடுக்கப்பட்டுள்ளன. இதில் இந்தியன் 2ஆவது பாகம் நாளை வெளியாகவுள்ளது. ஊழலுக்கு எதிராக கத்தியை தூக்கும் சுதந்திர போராட்ட வீரரின் கதையாக வெளியான இந்தியன் திரைப்படம் இன்று வரை ரசிகர் பட்டாளத்தைக் கொண்டுள்ளது.

இந்த நிலையில், பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகள் ஒரு பக்க தீவிரமாக நடைபெற்றது. இந்த ப்ரோமோஷன்நிகழ்ச்சியின் போது பல்வேறு விஷயங்களை ஷங்கர் பகிர்ந்து கொண்டார்.

இந்தியன் 4 பற்றி ஷங்கர்

இயக்குனர் ஷங்கரிடம் இந்தியன் 4ஆவது பாகம் எடுக்கப்படுமா எனக் கேட்கப்பட்டது. அதற்கு அவர், அத்தகைய திட்டமில்லை என்றார். அதேநேரத்தில் “வேள் பாரி” சரித்திர நாவலை 3 பாகமாக எடுக்க போவதாக கூறினார்

வேள்பாரி குறித்து ஷங்கர்

‘வேள்பாரி’ சரித்திர கதையை படமாக எடுக்கப் போவதாக ஷங்கர் அறிவித்துள்ளார். ‘இந்தியன் 2’ பட புரோமோஷன் நிகழ்வில் பேசிய அவர், வேள்பாரி சரித்திர நாவலை கொரோனா சமயத்தில் படித்தேன். என்னை மிகவும் ஈர்த்தது, உடனே அதை எழுதிய சு.வெங்கடேசன்கிட்ட பேசி, அதுக்கான ரைட்ஸ் வாங்கி, திரைக்கதையை உருவாக்கியுள்ளேன். ரெடியாக இருக்கு, பிரம்மாண்டத்தின் உச்சமாக அதை 3 பாகங்களாக படமாக எடுக்க திட்டமிட்டுள்ளேன். அந்த படத்தில் நடிக்கும் நடிகர்கள் இன்னும் முடிவாகவில்லை” எனக் கூறியுள்ளார்.

வேள்பாரி

பொன்னியின் செல்வன் படத்தை போலவே, தானும் ஒரு நாவலை இயக்க போவதாக ஷங்கர் முன்னதாக விழா தெரிவித்திருந்தார். அது தான் இந்த வேள்பாரி நாவலாகும், இதில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் படக்குழுவினர் குறித்த விவரங்கள் மறைக்கப்பட்டிருந்தாலும், பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கை கதாநாயகனாக நடிக்க ஷங்கர் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக ஒரு தகவல் முன்னதாக வெளியானது குறிப்பிடத்தக்கது.

Published by
கெளதம்

Recent Posts

ஜப்பானை காலி செய்ய காத்திருக்கும் பெரிய ஆபத்து – 3 லட்சம் மக்கள் உயிரிழக்க வாய்ப்பு.!

ஜப்பான் : மியான்மர்-தாய்லாந்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பேரழிவின் அதிர்ச்சியிலிருந்து உலகம் இன்னும் மீளவில்லை. அதற்குள் ஜப்பான் ஒரு பெரிய…

5 minutes ago

பரபரக்கும் அரசியல் களம்! அதிமுக – பாஜக கூட்டணி? அண்ணாமலை பதவிக்கு ஆபத்து?

சென்னை : அண்மைகாலமாக அதிமுக -பாஜக கூட்டணி குறித்த பேச்சுக்கள், அதே போல அதிமுக தலைமை மற்றும் பாஜக தலைமை…

32 minutes ago

வெயிலுக்கு இதமாய் வரும் மழை.! இந்த மாவட்டங்களில் 3 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு!

சென்னை : தமிழ்நாட்டில் வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில், அடுத்த சில நாட்களில் கனமழை சில மாவட்டங்களில் பெய்ய…

2 hours ago

டாஸ்மாக் விவகாரம்: தமிழ்நாடு அரசின் வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்க.! அமலாக்கத்துறை பதில் மனு…

சென்னை : தமிழகத்தில் டாஸ்மாக் தலைமை அலுவலகம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட இடங்களில் மார்ச் 6ம் தேதி முதல் 8ம்…

2 hours ago

“திருச்சியை தலைநகராக மாத்துங்க”! நயினார் கோரிக்கையை அன்போடு பரிசீலிப்போம்- முதல்வர் ஸ்டாலின்!

சென்னை : இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜனவரி 6, 2025 அன்று ஆளுநரின் உரையுடன் தொடங்கிய நிலையில்,…

3 hours ago

முடிஞ்சா மோதி பாருங்க!! ரசிகர்களால் ரோஹித்துக்கு புதிய சாதனை.! என்ன தெரியுமா?

மும்பை : நேற்றைய ஆட்டத்தில் கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் எளிதாக வென்று, நடப்பு ஐபிஎல் சீசனில் முதல் வெற்றியை மும்பை…

4 hours ago