இப்போ வரை சினிமாவில் இருக்க இது தான் காரணம்! மனம் திறந்த வேதிகா!

Published by
பால முருகன்

வேதிகா : தமிழ் சினிமாவில் குறைவான படங்களில் நடித்த நடிகைகள் எல்லாம் இன்றய காலத்திலும் ரசிகர்கள் மனதில் இருப்பார்களா என்பது சந்தேகம் தான் என்று சொல்லலாம். இருப்பினும், 90ஸ் காலகட்டத்தில் குறைவான படங்களில் நடித்து கலக்கி வந்த வேதிகா இன்று வரை அப்படியே ரசிகர்கள் மனதிலும், நிஜத்தில் இளமையாகவும் இருந்து வருகிறார். சினிமாவுக்கு வந்து பல ஆண்டுகள் கடந்தும் இன்னும் தாக்குப்பிடித்து கொண்டு இருப்பதற்கான காரணத்தை சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்டபோது வெளிப்படுத்தியுள்ளார்.

யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பேசிய நடிகை வேதிகா ” தென்னிந்திய மொழிகள் எனக்கு எதுவும் தெரியாது. மற்றவர்களை போல எனக்கு சகஜமாக பேச வரவே வராது. அப்படி பேச கொஞ்சம் தடுமாறுவேன். இருந்தாலும், தென்னிந்திய சினிமாவில் இன்று வரை தாக்குபிடித்து வருவதை நினைத்து பெருமைபடுகிறேன்.

எனக்கு கொடுக்கப்படும் வேலைகளை மிகவும் ஆர்வத்துடன் செய்து வருகிறேன். தென்னிந்திய படங்களில் நடிக்கும்போது அந்த படத்தின் படப்பிடிப்புக்கு செல்வதற்கு 2 நாட்களுக்கு முன்பு இயக்குனரிடம் பேசி நான் பேசவேண்டிய வசன பேப்பர்களை வாங்கிவிடுவேன். அப்போது தான் நான் தயக்கம் இல்லாமல் பேச சரியாகவும் இருக்கும்.

எனக்குள் இருக்கும் இது போன்ற திறமைகள் தான் தென்னிந்திய மொழி படங்களில் தொடர்ந்து நான் நடிக்க கை கொடுத்து வருவதாக நினைக்கிறன்” எனவும் நடிகை வேதிகா பேசியுள்ளார். மேலும். நடிகை வேதிகா தற்போது, பிரபு தேவாவுக்கு ஜோடியாக பேட்டராப் என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பால முருகன்

Recent Posts

ENGvsAUS : தொடரை சமன் செய்த இங்கிலாந்து! 186 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தல்!

லார்ட்ஸ் : இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் சுற்றுப்பயணத்தில் ஒருநாள் தொடரானது நடைபெற்று வருகிறது. இதற்கு…

8 hours ago

“இழிவா பேசாதீங்க”..மணிமேகலை VS பிரியங்கா பிரச்சினை குறித்து கொந்தளித்த நிஷா!

சென்னை : மணிமேகலை vs பிரியங்கா இருவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினை, பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்த நிலையில், இப்போது…

15 hours ago

தெரிக்கவிடலாமா.. துபாயில் ரேஸ் காரை ஓட்டி பார்த்த நடிகர் அஜித்.!

சென்னை : படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகர் அஜித் குமார், இன்னொரு பக்கம் கார் ரேஸ் போட்டியில் கலந்து கொள்வதற்கான…

16 hours ago

3 ஏ.டி.எம் கொள்ளை., ரூ.65 லட்சம் பணம்.! கேரளா போலீஸ் பரபரப்பு தகவல்கள்…

நாமக்கல் : இன்று காலையில் நாமக்கல் குமாரபாளையம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சினிமா பாணியில் வேகமாக சென்ற கண்டெய்னர் லாரியை…

16 hours ago

சோனியா காந்தியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு..!

டெல்லி : நேற்று அரசு முறைப்பயணமாக டெல்லிச் சென்ற தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், இன்று காலை பிரதமர் மோடியை…

16 hours ago

நவராத்திரி ஸ்பெஷல்.. நவராத்திரி பூஜையில் வைக்கபடும் 9 வகை சாதங்கள் எது தெரியுமா ?

சென்னை- நவராத்திரி அன்று அம்பிகைக்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நெய்வேத்தியங்கள்  படைக்கப்படுகிறது. அதைப்பற்றி இந்த ஆன்மீக செய்தி குறிப்பில் தெரிந்து…

16 hours ago