சினிமா

அந்த மாதிரி காட்சியில் நடித்த வரலட்சுமி சரத்குமார்! இப்போ இப்படி இறங்கிட்டீங்களே மேடம்!

Published by
பால முருகன்

நடிகை வரலட்சுமி சரத்குமார் தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி திரைப்படங்களிலும் நடித்துக்கொண்டு பிஸியான நடிகையாக வளம் வந்துகொண்டு இருக்கிறார். அந்த வகையில், தற்போது  தேஜா மார்னி என்பவருடைய இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘கோடபொம்மாலி பிஎஸ்’ என்ற தெலுங்கு படத்தில் நடித்து முடித்து இருக்கிறார்.

இந்த திரைப்படத்தில் நடிகை வரலட்சுமி சரத்குமார்  போலீஸ் வேடத்தில் நடித்து இருக்கிறார். இந்த படம் வரும் 24ஆம் தேதி  திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. இதனை முன்னிட்டு படத்திற்கான ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட வரலட்சுமி சரத்குமார் படம் பற்றி பேசியுள்ளார்.

அந்த மாதிரி ரோலில் நடிக்க காத்திருக்கும் ஷிவானி ராஜசேகர்! செம தில்லு தான் உங்களுக்கு!

இது குறித்து பேசிய அவர் ” நான் இதுவரை எந்த படத்திலும் புகை பிடிக்கும் காட்சியில் நடித்ததில்லை. ஆனால், ‘கோட்டா பொம்மாலி பி எஸ்’ படத்தின் கதைக்கு அவசியம் என்பதால் முதல்முறையாக புகை பிடிக்கும் காட்சியில் நடித்திருக்கிறேன். எனவே, இந்த படத்தில் நடிக்கும் போது அந்த காட்சி தான் எனக்கு சவாலாக இருந்தது. படத்தை பொறுத்தவரையில் நான் தான் ஹீரோவாக உணர்கிறேன். ஏனென்றால், படம் அப்படி தான் வந்து இருக்கிறது.

இதுவரை நான் தமிழ் சினிமாவில் சில திரைப்படங்களில் போலீஸ் வேடங்களில் நடித்து இருக்கிறேன். ஆனால், தெலுங்கில் முதன் முதலாக போலீஸ் வேடத்தில் இந்த படத்தில் தான் நடித்து இருக்கிறேன். படம் கண்டிப்பாக வெற்றி பெரும் என நான் நம்புகிறேன். படத்தை பாருங்கள் கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும்” எனவும் நடிகை வரலட்சுமி கூறியுள்ளார்.

மேலும், தொடர்ந்து பேசிய வரலட்சுமி ” எனக்கு எல்லா விதமான கதாபாத்திரங்களில் நடிக்கவும் ஆசை இருக்கிறது. ‘வரலக்ஷ்மி நிறைய வெரைட்டியான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் என்று மக்கள் வாயில் இருந்து வார்த்தை வரும் அளவிற்கு படங்களில் நடிக்கவேண்டும். என்னுடைய ‘ஹனுமான்’ தெலுங்குப் படம் சங்கராந்தி அன்று வெளியாகிறது அந்த படமும் நன்றாக இருக்கும் எனவும்” வரலட்சுமி  கூறியுள்ளார். இதுவரை வில்லி வேடத்தில் நடித்து கலக்கி வந்த இவர் தற்போது புகைபிடிக்கும் காட்சியில் நடித்துள்ளதாக கூறியுள்ளதை பார்த்த நெட்டிசன்கள் இப்போ இப்படி இறங்கிட்டீங்களே மேடம் என கூறி வருகிறார்கள்.

Published by
பால முருகன்

Recent Posts

தவெக பூத் கமிட்டி கருத்தரங்கில் சிறிய தீ விபத்து? “ஒதுங்கி நில்லுங்கள்!” விஜய் அட்வைஸ்!

கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார்…

5 minutes ago

தவெக பூத் கமிட்டி கருத்தரங்கு.., என்ன பேசப்போகிறார் விஜய்?

கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் தேர்தல் வாக்குசாவடி முகவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற உள்ளது.…

49 minutes ago

கட்டாய கடன் வசூல்., 3 ஆண்டுகள் சிறை! புதிய சட்ட மசோதா விவரங்கள் இதோ…

சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…

3 hours ago

காஷ்மீர் தாக்குதல் : “விசாரணைக்கு நாங்கள் தயார்!” பாகிஸ்தான் திடீர் அறிவிப்பு!

இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம்தாக்குதலில் 26 இந்தியர்கள் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு TRF எனும் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்று இருந்தது.…

4 hours ago

சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்து! 3 பேர் உயிரிழப்பு!

விருதுநகர் : பட்டாசு ஆலையில் தீ விபத்து சம்பவங்கள் அவ்வப்போது நடைபெறுவது தொடர் கதையாகி வருகின்றன. இன்றும் சிவகாசி அருகே…

4 hours ago

பாகிஸ்தான் அதிகாரியின் ‘கழுத்தறுப்பு’ சைகையால் வெடித்த சர்ச்சை! வைரலாகும் வீடியோ…

லண்டன் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதியன்று காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர்…

5 hours ago