நடிகர் வடிவேலு தற்போது இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள நாய் சேகர் ரிட்டன்ஸ் எனும் திரைப்படத்தில் நடித்துமுடித்துள்ளார். இந்த திரைப்படம் வரும் 9-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. அதற்கான ட்ரைலர் கூட சமீபத்தில் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பை அதிகமாக்கியது என்றே கூறலாம்.
மேலும் வடிவேலு பொதுவாக எந்த விழாவிற்கு சென்றாலும் கண்டிப்பாக அந்த விழா கலகலப்பாக இருக்கும், பாடல் பாடுவது, நடனம் ஆடுவது என வடிவேலு ஜாலியாக இருப்பார். அந்த வகையில், நாய் சேகர் ரிட்டன்ஸ் படம் வரும் டிசம்பர் 9-ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படத்தின் ப்ரோமோஷனுக்காக வடிவேலு சென்னையில் உள்ள எத்திராஜ் எனும் கல்லூரிக்கு சென்றிருந்தார்.
இதையும் படியுங்களேன்- அட்டகத்தி அஸீம்…பூமர் விக்ரமன்…டிவிட்டரில் அடித்துக்கொள்ளும் பிக் பாஸ் ரசிகர்கள்.!
அங்கு நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தின் பாடலை பாடி நடனமாடி மாணவர்களை வடிவேலு உற்சாகப்படுத்தியுள்ளார். அங்கிருந்த மாணவர்களுடன் ஆடி, பாடி, வடிவேலு அட்ராசிட்டி செய்துள்ள அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. வீடியோவை பார்த்த பலரும், வடிவேலு இன்னும் மாறவேயில்லை என கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
மேலும் நடிகர் வடிவேலு நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தை தொடர்ந்து அடுத்ததாக மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் மாமன்னன், மற்றும் லாரன்ஸுடன் சந்திரமுகி படத்தின் இரண்டாவது பாகத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…