அவர் முகத்தில் முழிக்கவே மாட்டேன்.! அசிங்கமாக திட்டிய வடிவேலு…பாவா லட்சுமணன் பகிர்.!

Published by
கெளதம்

Vadivelu: நடிகர் வடிவேலு ஆபிஸ் சென்றால் இங்கெல்லாம் வராதீங்க என்று அசிங்கமாக திட்டுவார் என நடிகர் பாவா லட்சுமணன் வருத்தத்துடன் கூறிஉள்ளார்.

சினிமா என்பது போட்டிகள் பொறாமைகள் நிறைத்த உலகம், அதற்கு எடுத்துக்காட்டாக பிரபலங்கள் பலர் தங்களுக்கு நடந்த சம்பவத்தை தனியார் சேனல்களுக்கு பேட்டி அளிப்பதுவழக்கம். அந்த வகையில், வடிவேலு பற்றி அவருடன் நடித்த சக நடிகர்கள் அவரை பற்றிய பல அதிர்ச்சிகரமான தகவல்களை பகிர்ந்துள்ளனர்.

அவ்வாறு நடிகர் பாவா லட்சுமணன் சில அதிர்ச்சிகரமான தகவலை பகிர்ந்து கொண்டார். நகைச்சுவை நடிகர் பாவா லட்சுமணன் திரையில் வடிவேலுவுடன் நடித்த சில காமெடி கட்சிகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக ‘மாயி’ படத்தில் அவர் பேசிய”வா மா மின்னல்” என்ற டயலாக் இன்றும் ரசிகர்களால் ரசிக்கப்படுகிறது.

பாவா லட்சுமணன் அண்மையில், உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அதாவது, நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட நிலையில், அவருக்கு சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் கால் விரல் அகற்றும் அறுவை சிகிச்சைக்கு பிறகு, தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளது.

உடல் நலம் தெரிய நிலையில் தனியார் ஊடகதிற்கு பேட்டி அளித்து வந்தார். தான் கடந்த வந்த பாதைகள் குறித்து பேசியுள்ளார், அப்பொழுது நடிகர் வடிவேலு குறித்தும் பேசினார். அதாவது  தொகுப்பாளர், பாவா லட்சுமணனிடம் திரையுலகில் யாரை இனிமேல் பார்க்க கூடாது என நினைக்கிறீர்கள் என கேள்வி எழுப்பினார்.

அதற்கு பாவா லட்சுமணன் உடனே, “வைகை புயல் என்றார், நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில் எங்களை யாரையுமே கூப்பிடவில்லை, அது கூட பரவாயில்லை. இதை பற்றி வடிவேலு ஒரு பேட்டியில் சொல்லிருப்பார், பழைய ஆட்கள் யாரையும் கூப்பிடல, கட் பண்ணிட்டேன் புது ஆள் போட்ருக்கேன் என்று கூறிஉள்ளார்.  அப்போதெல்லாம் நாங்க ஏதாவது சொன்னா கேட்பாரு, இப்போ அந்த புதிய ஆட்கள் எதுத்து பேசுறாங்க, நாங்கலாம் அவுங்க வாங்குற சம்பளம் வாங்கவே இல்லை.

அவங்கெல்லாம் 20, 25 ஆயிரம் வாங்கிருக்காங்க. நாங்க இதுவரை வெறும் 5 ஆயிரம் ரூபாய் தான் வங்கியிருக்கோம் என்றும், அவரது ஆபிஸ் சென்றால் இங்கெல்லாம் வராதீங்க என்று அசிங்கமாக திட்டுவார். என்னை நாய் சேகர் படத்தில் கூப்பிடுவதாக சொன்னார் ஆனால் கூப்பிடவே இல்லை, நானும் அப்படியே விட்டுவிட்டேன் என்று வருத்தத்துடன் கூறினார் பாவா லட்சுமணன்.

Recent Posts

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…

13 hours ago

பாஸ்போர்ட் அப்ளை செய்ய போறீங்களா.? அடுத்த 3 நாட்கள் முடியவே முடியாது.!

மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…

13 hours ago

INDvsBAN : “அவர் ரொம்ப உதவி பண்ணாரு”! சதம் விளாசிய பின் அஸ்வின் பேச்சு!

சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…

13 hours ago

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்! தங்கலான் முதல் வாழ வரை!

சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…

14 hours ago

‘இட்லி கடை’ போட்ட தனுஷ்.! மீண்டும் கேங்ஸ்டர் படமா?

சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…

14 hours ago

INDvBAN : சம்பவம் செய்து வரும் அஸ்வின்-ஜடேஜா! வலுவான நிலையில் இந்தியா!

சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…

14 hours ago