க்ரிப்டோ கரன்சி விளம்பரம் செய்த த்ரிஷா? அதிர்ச்சியின் அடுத்த நொடியே இன்ஸ்டாவில் அந்த பதிவு.!
தனது எக்ஸ் தள பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக நடிகை திரிஷா இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.

சென்னை : நடிகை த்ரிஷாவின் எக்ஸ் தள பக்கத்தில் திடீரென க்ரிப்டோ கரன்சி விளம்பரம் வந்ததால், ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். அதில், அவர் புதிதாக க்ரிப்டோ கரன்சியை உருவாக்கி இருப்பதாகவும், உடனடியாக அதை வாங்குமாறும் தெரிவித்திருந்தார்.
ஜல்லிக்கட்டுக்கு எதிரான தடை குறித்து த்ரிஷாவின் எக்ஸ் தளம் ஹேக் செய்யப்பட்டு, ஜல்லிக்கட்டுக்கு எதிராக தீவிரமாக பிரச்சாரம் செய்த பீட்டாவை ஆதரிப்பதாக செய்தி வெளியிடப்பட்டிருந்து. பின்னர் அந்த பதிவுகள் நீக்கம் செய்யப்பட்டு, தனது எக்ஸ் பக்கம் ஹேக் செய்யப்பட்டதாக தெளிவுப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.