18 வருடம் கழித்து சிரஞ்சீவியுடன் இணைந்த திரிஷா.!

Published by
கெளதம்

நடிகர் சிரஞ்சீவியின் தெலுங்கு படமான ‘விஸ்வம்பர’ படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கும் நடிகை த்ரிஷா இன்று படப்பிடிப்பில் இணைந்தார்.

பொன்னியின் செல்வன் படத்தின் மூலம் மீண்டும் சூப்பரான ரீ-என்ட்ரி கொடுத்த நடிகை த்ரிஷாவுக்கு தொடர்ச்சியா பெரிய பெரிய படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில், கடைசியாக அவர் விஜய்க்கு ஜோடியாக லியோ திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மக்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

தற்பொழுது, லியோ படத்தை தொடர்ந்து, நடிகை திரிஷா அஜித்குமார் முக்கிய வேடத்தில் நடித்து வரும் விடாமுயற்சி படத்தில் நடித்து வந்தார். இந்த நிலையில், தெலுங்கு சினிமாவில் மெகாஸ்டார் என்று அழைக்கப்படும் சிரஞ்சீவி நடிக்கும் புதிய படத்திற்காக 18 வருடங்கள் கழித்து நடிகை திரிஷா மீண்டும் ஒன்றாக இணைந்துள்ளனர்.

தயாரிப்பாளர்கள் வெளியிட்ட வீடியோவில் சிரஞ்சீவி மற்றும் அவரது இயக்குனர் வசிஷ்டா அவரை செட்டில் வரவேற்பதைக் காட்டுகிறது. இயக்குனர் மல்லிடி வசிஷ்டா இயக்கத்தில் யுவி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் விஸ்வம்பர. இந்த படத்திற்கு ஆஸ்கார் விருது பெற்ற எம்.எம்.கீரவாணி இசையமைக்க, மூத்த ஒளிப்பதிவாளர் சோட்டா கே நாயுடு ஒளிப்பதிவு செய்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று ஹைதராபாத்தில் தொடங்கிய சமீபத்திய ஷெட்யூலில் திரிஷா இணைந்துள்ளார்.ஸ்டாலி படத்துக்கு பிறகு சிரஞ்சீவியுடன் திரிஷா இரண்டாவது முறையாக இணைந்துள்ள படம் விஸ்வம்பரா.

விடாமுயற்சி படத்தால் நொந்துபோன நடிகை த்ரிஷா?

அது மட்டும் இல்லாமல், திரிஷாவின் தமிழ் படங்கள் தெலுங்கில் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டாலும், அவரது கடைசி தெலுங்கு படம் 2014-ல் வெளியான நந்தமுரி பாலகிருஷ்ணாவின் சிங்கம் திரைப்படம் தான். இந்த படத்தில் த்ரிஷா பிரபாஸ், ரவி தேஜா, அக்கினேனி நாகார்ஜுனா, மகேஷ் பாபு ஆகியோர் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Recent Posts

பருப்பு விவகாரம்., “பாஜகவின் ஆதாரமற்ற குற்றசாட்டு.!” தமிழக அரசு வெளியிட்ட விளக்க அறிக்கை..,

சென்னை : தமிழக ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு சரிவர கிடைக்கப்பெறவில்லை என்றும், கடந்த 6 மாதங்களாக சரிவர கிடைக்காமல்…

20 mins ago

IND vs NZ : ‘ஒரு கேப்டனாக வேதனை அடைந்தேன்’.. ரோஹித் சர்மா பேச்சு!

பெங்களூர் : இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாளானது மழையின் காரணமாக நடைபெறாமல்…

1 hour ago

‘நவம்பர்… தமிழகத்திற்கு அதிக மழை கொண்டு வரும்’ – விளக்கம் கொடுத்த வெதர்மேன்!

சென்னை : கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் கனமழை பெய்து வந்த நிலையில் தற்போது அடுத்ததாக வரும் அக்-20 ம்…

2 hours ago

ஹமாஸ் தலைவர் உயிரிழப்பு : “மீதம் இருப்பவர்களையும் அழிப்போம்” – நெதென்யாகு சபதம்!

ஜெருசலேம் : காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும், இஸ்ரேல் ராணுவத்திற்கும் இடையே கடந்த ஒரு வருட காலமாக போர்…

2 hours ago

காலை 10 மணி வரை இந்த 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்!

சென்னை : வங்க கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று கரையைக் கடந்தது. இதனால், தமிழகம் மற்றும்…

2 hours ago

பை பை ஆஸி.! இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது தென்னாப்பிரிக்கா மகளிர் அணி!

துபாய் : நடைபெற்று வரும் மகளிர் உலகக் கோப்பை தொடரில் முதல் அரை இறுதிப் போட்டியானது இன்று நடைபெற்றது. இந்தப்…

11 hours ago