Categories: சினிமா

தப்பு செய்தவர்கள் தப்பிக்க முடியாது – நடிகர் சூரி பேட்டி.!

Published by
பால முருகன்

நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தை ரமேஷ் குடவாலா மீது நடிகர் சூரி கடந்த சில மாதங்களுக்கு முன்பு பண மோசடி புகார் அளித்திருந்தார். இந்த புகாரில் நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தை தன்னிடம் 2.7 கோடி ரூபாய் மோசடி செய்ததாகவும் தன்னிடம் நிலம் வாங்கி தருவதாக அந்த பணத்தை அவர் வாங்கி வைத்திருந்தார் என்றும் கூறியிருந்தார்.

இதுகுறித்த வழக்கு நடைபெற்று வரும் நிலையில், அந்த வழக்கிற்காக நேற்று நடிகர் சூரி சென்னை ஆணையர் அலுவலகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு போலீசார் முன்பு ஆஜரானார். ஆஜராகி, இந்த வழக்கு குறித்து வாக்குமூலம் அளிக்க உள்ளார் என்று கூறப்படுகிறது.

ஆஜரான பின் நடிகர் சூரி அளித்த பேட்டியில் அவர் கூறியது” என்னுடைய வழக்கு அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். பண விவகாரத்தில் ஏமாந்து உள்ளேன். இந்த வழக்கு அடையார் காவல் நிலையத்தில் போய்க்கொண்டிருந்தது. அங்கிருந்து திருப்திகரமான விசாரணை இல்லை என்று உயர் நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்திருந்தோம்…

அங்கிருந்து, இப்போ சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில், துணை ஆணையர் தலைமையிலான விசாரணை நடக்கிறது. அது விஷயமா நான் வந்திருக்கிறேன்.. நிச்சயம் எனக்கு நியாயம் கிடைக்கும் என ரொம்ப நம்பிக்கையாக இருக்கிறேன்.நேர்மையாக உழைத்து கஷ்டப்பட்டு இந்த இடத்தில் இருக்கிறேன்…கண்டிப்பாக நியாயம் கிடைக்கும் என நினைக்கிறன். அந்த கடவுள் மாதிரி, நீதிமன்றத்தையும் காவல்துறை மட்டுமே நம்பி உள்ளேன் தப்பு செய்தவர்கள் தப்பிக்க முடியாது”என கூறியுள்ளார்.

Published by
பால முருகன்

Recent Posts

கடைசி வரை போராடிய டெல்லி….கடைசி நேரத்தில் த்ரில் வெற்றி பெற்ற கொல்கத்தா!

டெல்லி : இன்று டெல்லி அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட்…

3 hours ago

சாட்ஜிபிடியை ஓரம் கட்ட ஸ்கெட்ச் போட்ட மார்க் ஜுக்கர்பெர்க்! போட்டியில் களமிறங்கிய Meta AI ஆப்!

மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க், இன்று (ஏப்ரல் 29, 2025) ஒரு புதிய Meta AI…

4 hours ago

திணறி கொண்டே அதிரடி காட்டிய கொல்கத்தா…டெல்லிக்கு வைத்த பெரிய டார்கெட்?

டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…

5 hours ago

“200 தொகுதிகளுக்கும் மேல் வெல்வோம்” தமிழிசைக்கு பதிலடி கொடுத்த மு.க.ஸ்டாலின்!

சென்னை : இன்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த போது திமுக குறித்து விமர்சனம் செய்து…

6 hours ago

என்னுடைய மனைவி தான் தூண்…பத்மபூஷன் விருது வாங்கிய அஜித் எமோஷனல்!

டெல்லி : இந்த ஆண்டுக்கான (2025) பத்ம பூஷன் விருது கடந்த ஜனவரி 25-ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு யாருக்கெல்லாம்…

6 hours ago

KKRvsDC : வெற்றிப்பாதைக்கு திரும்புமா டெல்லி? டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு!

டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…

7 hours ago