இயக்குனர் சுதாகொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் சூரரைப்போற்று. இப்படம் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தைத் தொடர்ந்து சூர்யா சுதா கொங்கரா இயக்கத்தில் மீண்டும் ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாக கடந்த சில நாட்களாவே இணையத்தில் செய்திகள் பரவி வந்தது.
இதுகுறித்து சமீபத்தில் பேசிய சுதாகொங்கரா “நான் சூர்யாவுடன் படம் பண்ணுவது 100% உறுதி. இந்தப்படம் சூரரைப்போற்று படத்தை விட எனக்கு ரொம்பவே சவாலான படமாக இருக்கும் என நான் நினைக்கிறன். மிகவும் பெரிய பட்ஜெட் படம்.
இந்த படம் பயோபிக் கிடையாது ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்படவுள்ளது. அந்த சம்பவம் என்னை மிகவும் பாதித்த விஷயம். அது தான் நான் சூர்யாவை வைத்து இயக்கவுள்ள படம்.” என தெரிவித்துள்ளார்.
நடிகர் சூர்யா தற்போது இயக்குனர் பாலா இயக்கத்தில் தனது 41-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தொடர்ந்து இயக்குனர் வெற்றிமாறன் இயக்கும் வாடிவாசல் படத்தில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : ரஜினிகாந்த் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் கூலி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு…
சென்னை : தமிழ்நாடு தேசிய கல்வி கொள்கையை ஏற்றால் தான் நிதி தருவோம் என்ற நிலைப்பாட்டுடன் இருப்பதாகவும், தேசிய கல்வி…
டெல்லி : வக்பு வாரியம் என்பது இஸ்லாமிய மக்களால் தானமாக வழங்கப்பட்ட சொத்துக்களை நிர்வகிக்கும் ஒரு இஸ்லாமிய அமைப்பு ஆகும்.…
சென்னை : எம்.ஜி.ஆர் - சிவாஜி காலத்தில் இருந்து சினிமாவில் பாட துவங்கி, தற்போது அஜித் - விஜயை தொடர்ந்து…
ஆப்கானிஸ்தான் : அணியில் பந்துவீச்சில் தூண் என்றால் லெக்-ஸ்பின்னர் ரஷித் கான் என்று சொல்லலாம். அந்த அளவுக்கு அணியின் வளர்ச்சிக்கு…
சென்னை : மும்மொழிக் கொள்கை விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ள நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் "பெரியார், அண்ணா, கலைஞர்…