இயக்குனர் சுதாகொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் சூரரைப்போற்று. இப்படம் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தைத் தொடர்ந்து சூர்யா சுதா கொங்கரா இயக்கத்தில் மீண்டும் ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாக கடந்த சில நாட்களாவே இணையத்தில் செய்திகள் பரவி வந்தது.
இதுகுறித்து சமீபத்தில் பேசிய சுதாகொங்கரா “நான் சூர்யாவுடன் படம் பண்ணுவது 100% உறுதி. இந்தப்படம் சூரரைப்போற்று படத்தை விட எனக்கு ரொம்பவே சவாலான படமாக இருக்கும் என நான் நினைக்கிறன். மிகவும் பெரிய பட்ஜெட் படம்.
இந்த படம் பயோபிக் கிடையாது ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்படவுள்ளது. அந்த சம்பவம் என்னை மிகவும் பாதித்த விஷயம். அது தான் நான் சூர்யாவை வைத்து இயக்கவுள்ள படம்.” என தெரிவித்துள்ளார்.
நடிகர் சூர்யா தற்போது இயக்குனர் பாலா இயக்கத்தில் தனது 41-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தொடர்ந்து இயக்குனர் வெற்றிமாறன் இயக்கும் வாடிவாசல் படத்தில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…