இது தான் நிஜ ஜாக்பாட்…சூப்பர் ஸ்டாரை தொடர்ந்து கமல்ஹாசனுடன் இணையும் நெல்சன்.!?

Default Image

இயக்குனர் நெல்சன் திலீப் குமார் தற்போது நடிகர் ரஜினிகாந்தை வைத்து ஜெயிலர் திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தை சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வரும் நிலையில். படம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், இந்த திரைப்படத்தை தொடர்ந்து இயக்குனர் நெல்சன் திலீப் குமார் அடுத்ததாக கமல்ஹாசனுடன் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆம், கமல்ஹாசன் தனது ராஜ் கமல் நிறுவனத்தின் சார்பில் அடுத்ததாக ஒரு புதிய திரைப்படத்தை தயாரிக்கவுள்ளாராம்.

இதையும் படியுங்களேன்- அஜித் ரசிகர்களே…’துணிவு’ படத்தின் டிரைலர் எப்போது வெளியாகிறது தெரியுமா..?

அந்த படத்தை இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கவுள்ளதாகவும் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளது. இயக்குநர் நெல்சன் “ஜெயிலர்” படத்தைத் திட்டமிட்டபடி குறிப்பிட்ட நாள்களுக்குள்ளேயே முடிப்பதில் தீவிரமாக வேலை செய்து வருகிறாராம்.

எனவே இந்த திரைப்படத்தை இயக்கி முடித்த பிறகு இயக்குனர் நெல்சன் திலீப்குமார் அடுத்ததாக கமல்ஹாசன் தயாரிக்கும் படத்தை இயக்குவார் என்று கூறப்படுகிறது. விரைவில் இந்த படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்