சினிமா

இது ரொம்ப புதுசா இருக்கு ஆண்டவரே! ‘பிக் பாஸ்’ வீட்டிற்குள் வைட்லட் கார்ட் என்ட்ரி எத்தனை பேர் தெரியுமா?

Published by
பால முருகன்

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தொடங்கி விறு விறுப்பாக ஒளிபரப்பாகி வரும் நிலையில், 3-வாரங்கள் ஆன நிலையில், 3 போட்டியாளர்கள் இதுவரை வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். அனன்யா, பவா செல்லத்துரை,  விஜய் உள்ளிட்டோர் தொடர்ச்சியாக பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்கள். வாரம் வாரம் தவறாமல் பிக் பாஸ் வீட்டிற்குள் எலிமினேஷன் மற்றும் நாமினேஷனும் நடந்து வருகிறது.

கடந்த வாரத்திற்கு முன்பு அதாவது இரண்டாவது வாரம் பவா செல்லத்துரை வீட்டில் இருந்த்து தனிப்பட்ட காரணங்களுக்காக வெளியேறிய காரணத்தால் அந்த வாரம் மட்டும் எலிமினேஷன் கிடையாயது என பிக் பாஸ் அறிவித்து இருந்தது. இந்த நிலையில், அதனை தொடர்ந்து கடந்த வாரம் (நேற்று) வீட்டில் இருந்து விஜய் வெளியேறினார்.

இந்த நிலையில், எப்போதுமே பிக் பாஸ் நிகழ்ச்சியில் வைட்லட் கார்ட்  என்ட்ரியின் மூலம் போட்டியாளர்கள் வாரம் வாரம் உள்ளே நுழைவார்கள். வழக்கமாக ஒரு வாரத்திற்கு இரண்டு மற்றும் 1 என்ற கணக்கின் அடிப்படையில் தான் உள்ளே நுழைவார்கள் ஆனால், இந்த முறை  3,4 பேர் இல்லை 5 பேர் வைட்லட் கார்ட்  என்ட்ரியின் மூலம் உள்ளே நுழைய விருக்கிறார்களாம்.

அதற்கான புது ப்ரோமோவும் வெளியாகியுள்ளது. ப்ரோமோவில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் கமல்ஹாசன் பிக் பாஸ் வீடே இந்த முறை இரண்டாக இருக்கிறது. இரண்டு வீடுகள் இருப்பதால் வைட்லட் கார்ட்  என்ட்ரியின் மூலம் இந்த முறை 5 பேர் நுழையவுள்ளார்கள் அவர்கள் யார் என்பதை வரும் 28-ஆம் தேதி அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

மேலும். இந்த 5 பேரில் இரண்டு போட்டியாளர்கள் பெயர் குறித்த விவரங்களும் தற்போது கிடைத்திருக்கிறது. கிடைத்த தகவல்களின்படி, தொகுப்பாளினியாக கலக்கி வந்த அர்ச்சனா அடுத்த வாரம் வைல்ட் கார்டாக ஷோவில் நுழைவது உறுதி ஆகி விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மற்றொரு போட்டியாளர் தமிழ் சினிமாவை பல ஹிட் பாடல்களை பாடிய பால முருகன் (கனா பாலா) இந்த முறை பிக் பாஸ் வீட்டிற்குள் நுழையவுள்ளார்களாம். மீதமுள்ள 3 போட்டியாளர்கள் யார் என்பது பற்றிய விவரம் இதுவரை வெளியாகவில்லை. யாரெல்லாம் வீட்டிற்குள் செல்கிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Published by
பால முருகன்

Recent Posts

IND vs NZ : ‘ஒரு கேப்டனாக வேதனை அடைந்தேன்’.. ரோஹித் சர்மா பேச்சு!

பெங்களூர் : இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாளானது மழையின் காரணமாக நடைபெறாமல்…

31 mins ago

‘நவம்பர்… தமிழகத்திற்கு அதிக மழை கொண்டு வரும்’ – விளக்கம் கொடுத்த வெதர்மேன்!

சென்னை : கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் கனமழை பெய்து வந்த நிலையில் தற்போது அடுத்ததாக வரும் அக்-20 ம்…

37 mins ago

ஹமாஸ் தலைவர் உயிரிழப்பு : “மீதம் இருப்பவர்களையும் அழிப்போம்” – நெதென்யாகு சபதம்!

ஜெருசலேம் : காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும், இஸ்ரேல் ராணுவத்திற்கும் இடையே கடந்த ஒரு வருட காலமாக போர்…

54 mins ago

காலை 10 மணி வரை இந்த 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்!

சென்னை : வங்க கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று கரையைக் கடந்தது. இதனால், தமிழகம் மற்றும்…

1 hour ago

பை பை ஆஸி.! இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது தென்னாப்பிரிக்கா மகளிர் அணி!

துபாய் : நடைபெற்று வரும் மகளிர் உலகக் கோப்பை தொடரில் முதல் அரை இறுதிப் போட்டியானது இன்று நடைபெற்றது. இந்தப்…

10 hours ago

நாளை எந்தெந்த இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு? வானிலை மையம் கொடுத்த அலர்ட்!

சென்னை : மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று…

13 hours ago