சினிமா

“இப்படி தான் சாய்ராவை சந்திச்சேன்” உருக வைக்கும் ஏ.ஆர்.ரஹ்மானின் காதல் கதை!

Published by
பால முருகன்

சென்னை : இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தன்னுடைய மனைவி சாய்ரா பானுவை விவாகரத்து செய்துள்ளதாக அறிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 29 வருடத் திருமண வாழ்க்கைக்குப் பிறகு நவம்பர் 19 புதன்கிழமை விவாகரத்து செய்வதாக இருவரும் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.

இவர்களுடைய, இந்த முடிவு ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் அவருடைய மனைவி இருவரும் ஒன்றாக இருந்தபோது பேட்டிகளில் கலந்துகொண்டு பேசிய வீடியோக்களும் வைரலாகி கொண்டு இருக்கிறது. அப்படி வைரலாகி வரும் ஒரு வீடியோவில் ஏ.ஆர்.ரஹ்மான் சாய்ரா பானுவை முதல் முறையாகப் பார்த்தது எப்போது? எப்படி திருமணம் நடந்தது என்பது பற்றிப் பேசியிருக்கிறார்.

முதல் முறையாக ஏ.ஆர்.ரஹ்மான் சாய்ரா பானுவை 1995-ஆம் ஆண்டு ஜனவரி 6-ஆம் தேதி சந்தித்துள்ளார். அன்று ரஹ்மானின் 28-வது பிறந்த நாளும் என்பதால் அவரை பார்த்தவுடன் அன்றையே நாளிலே அவரிடம் பேசத் தொடங்கியிருக்கிறார். இருவருக்கும் பிடித்துப்போக தொலைபேசி மூலம் சில மாதங்கள் பேசி உள்ளார்கள்.

அப்படிப் பேசிக்கொண்டு இருந்த சமயத்தில் சாய்ரா ஆங்கிலத்தில் பேசிக்கொண்டு இருந்தபோது என்னைத் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறீர்களா என்று? ஏ.ஆர்.ரஹ்மான் வெளிப்படையாகவே கேட்டுள்ளார். திடீரென ரஹ்மான் இப்படிக் கூறியதும் சாய்ரா இன்ப அதிர்ச்சியாகி ஒன்னும் பேசாமல் இருந்துள்ளார்.

பிறகு திருமணம் செய்துகொள்ளச் சம்மதம் தெரிவித்திருக்கிறார். பிறகு இந்த விஷயத்தை வீட்டில் எடுத்துச் சொல்லவேண்டும் என்று ஏ.ஆர்.ரஹ்மான் முடிவெடுத்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் தயார் மற்றும் சகோதரிக்கு சாய்ரா யார் என்றும் அவருடைய குடும்பம் யார் என்றும் தெரியாது. ஆனால், அவர்கள் வழக்கமாகச் செல்லும் கோவிலிலிருந்து 5 வீடு தள்ளி அவருடைய வீடு இருந்தது.

எனவே, ரஹ்மான் தயார் மற்றும் சகோதரி நடந்து சென்று சாய்ராவிடம் பேசியுள்ளனர். பிறகு இரு வீட்டார்கள் கலந்து பேசி 1995-ஆம் ஆண்டு மார்ச் மாதம் இவர்களுடையே திருமணம் நடந்தது. எதுவுமே திட்டமிட்டு நடக்கவில்லை எல்லா புகழும் இறைவனுக்கே என்கிறது போல எல்லாம் இயல்பாகவே நடந்தது என்று அந்த பழைய நேர்காணலில் ஏ.ஆர்.ரஹ்மான் கூறினார்.

Recent Posts

விசில் போடு! சென்னை – மும்பை போட்டியை பார்க்க ரெடியா? டிக்கெட் விற்பனை அப்டேட் இதோ!

சென்னை : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் வரும் மார்ச் 22-ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ள நிலையில், கிரிக்கெட் ரசிகர்கள் போட்டியை…

22 minutes ago

“பாஜகவின் அடியாள் ED…அதைவச்சு பழிவாங்குறாங்க”அமைச்சர் ரகுபதி காட்டம்!

சென்னை : டாஸ்மாக் தலைமை அலுவலகம், மதுபான ஆலைகள் என பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தியதாகவும், இதில் டெண்டர்…

58 minutes ago

விஜய் வர்மாவுடன் காதல் முறிவா? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த தமன்னா?

சென்னை : நடிகை தமன்னா கடந்த சில ஆண்டுகளாக நடிகர் விஜய் வர்மாவை காதலித்து வருகிறார். இருவரும் கடந்த 2022-ஆம் ஆண்டிலிருந்து…

2 hours ago

“திருமா எங்களோடு போராட வேண்டும்!” பாஜக எம்எல்ஏ பகிரங்க அழைப்பு!

சென்னை : டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி அளவுக்கு முறைகேடு நடைபெற்றுள்ளதாக அமலாக்கத்துறை கூறியிருந்த நிலையில். டாஸ்மாக் முறைகேட்டிற்கு எதிராக பாஜகவினர்…

2 hours ago

“ஒற்றுமையாகதான் இருக்கோம் யாரும் பிரிக்க முடியாது”.. செங்கோட்டையன் குறித்த கேள்விக்கு இபிஎஸ் பதில்!

சென்னை : அத்திக்கடவு திட்டம் வெற்றிபெற்றதற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு பாராட்டு கூட்டம் நடைபெற்றபோது அதில் முன்னாள் அமைச்சர்…

2 hours ago

தோனி ரொம்ப கஷ்டப்பட்டாரு…ஆனா இப்போ? ஒரு நாள் விதிகளால் கடுப்பான மொயீன் அலி!

டெல்லி : ஆரம்ப காலங்களில் ஒரு நாள் போட்டிகளில் ஒரு பந்து மைதானத்திற்கு வெளியே அடிக்கப்பட்டு காணாமல் போனது என்றால்…

3 hours ago