Categories: சினிமா

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற போகும் அந்த இருவர் இவர்கள்தான்!

Published by
கெளதம்

பிக்பாஸ் தமிழ் சீசன் 7 தற்போது 50 நாட்களை கடந்துள்ளது. இந்நிலையில் இந்த வாரம் நடந்த பூகம்ப டாஸ்க்கில் தோல்வியடைந்த ஹவுஸ்மேட்ஸ் வெளியேற, பழைய போட்டியளார்கள் வீட்டிற்குள் மீண்டும் புதிய போட்டியாளர்களாக களமிறங்க உள்ளனர்.

இந்த முறை இரண்டு பேர் வெளியேற செய்ய முடிவு செய்துள்ளதால், முன்னர் வெளியேற்றப்பட்ட மூன்று போட்டியாளர்கள் வைல்ட் கார்ட் என்ட்ரியாக மீண்டும் வீட்டுக்குள் வரவுள்ளதாக சொல்லப்படுகிறது.

ஏற்கனவே, ஒரே வாரத்தில் 5 வைல்ட் கார்ட் போட்டியாளர்கள் வீட்டுக்குள் நுழைந்தன. அதில், அன்ன பாரதி சென்ற ஒரே வாரத்திலேயே வெளியில் சென்று விட்டார். இதனை தொடர்ந்து, கடந்த வாரம் கானா பாலாவும் வெளியேறி விட்டார். அந்த வகையில், இந்த வாரம் இரண்டாவது டபுள் எவிக்‌ஷன் நடைபெற இருக்கிறது.

இந்த வாரம் புல்லி கும்பலைச் சேர்ந்த இரண்டு போட்டியாளர்கள் வெளியே செல்வதாக சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றனர். இந்த வாரம் எலிமினேஷன் லிஸ்டில் ரவீனா, விசித்ரா, அக்ஷயா, மணி, அர்ச்சனா, மாயா, பூர்ணிமா மற்றும் பிராவோ ஆகிய 8 போட்டியாளர்கள் உள்ளனர்.

இதில் மாயா, பூர்ணிமா பிராவோ மற்றும் அக்‌ஷயா ஆகியோர் மிகக் குறைந்த வாக்குகளுடன் டேஞ்சர் சோனில் உள்ளதாக கூறப்படுகிறது. ஒரு சிலர் அக்‌ஷயா மற்றும் பூர்ணிமா வெளியேற்றப்படுவார்கள் என்று கூற, அக்‌ஷயாவும் பிராவோவும் நடையை கட்ட உள்ளதாக இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் அந்த போட்டியாளர்!

இப்படி இருவர் வெளியேற, மூன்று போட்டியாளர்கள் வீட்டுக்குள் வைல்ட் கார்ட் என்ட்ரி கொடுக்கவுள்ளனர். விஜய் வர்மா, அனன்யா ராவ், வினுஷா ஆகியோர் வைல்டு கார்டுகளாக மீண்டும் வீட்டிற்குள் நுழையும் வீரர்களாக இருப்பார்கள் என்று கூறப்படுகிறது.சரி எது என்னவோ… இந்த வாரம் இவர்கள் இருவரும் வெளியேற்றப்படுவார்களா  என்பதை நாளைய எபிசோட் வரை காத்திருக்க வேண்டும்.

Recent Posts

அதுக்கு ஓவர் கொடுக்கவில்லை? அஸ்வினி குமாருக்காக ஹர்திக் பாண்டியாவை வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்!

மும்பை :  ஐபிஎல் 2025 சீசனில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணிகளுக்கு இடையே மார்ச்…

30 minutes ago

குறைந்தது வர்த்தக கேஸ் சிலிண்டர் விலை! மகிழ்ச்சியில் வணிகர்கள்!

சென்னை : இந்தியாவில் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலையை எண்ணெய் நிறுவனங்களான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (IOC), ஹிந்துஸ்தான் பெட்ரோலியம்…

1 hour ago

மும்பைக்கு கிடைத்த புது ஹீரோ! யார் இந்த ‘ஆட்ட நாயகன்’ அஸ்வினி குமார்?

மும்பை :  எப்போதுமே திறமையான இளம் வீரர்களை எடுத்து அவர்களுக்கு வாய்ப்பு கொடுத்து அவர்களும் வளர்வதற்கு ஒரு காரணத்தை மும்பை…

1 hour ago

MI vs KKR : சொந்த மண்ணில் கெத்தாக முதல் வெற்றியை ருசித்த மும்பை! கொல்கத்தா படுதோல்வி!

மும்பை : ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் விளையாடின. டாஸ்…

9 hours ago

MI vs KKR : சொந்த மண்ணில் கொல்கத்தாவை ‘ஆல் அவுட்’ செய்த மும்பை.! 117 தான் டார்கெட்!

மும்பை : ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் விளையாடி வருகின்றன.…

11 hours ago

பாஜக -ஆர்எஸ்எஸ் இடையே என்ன நடக்கிறது? பிரதமர் மோடி ராஜினாமா செய்யபோகிறாரா?

டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி நேற்று (மார்ச் 30) நாக்பூர் பயணம் மேற்கொண்டது, இந்த பயணத்தில் ஆர்எஸ்எஸ் தலைமையகத்திற்கு…

11 hours ago