புஷ்பா 2 : இந்திய சினிமாவில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாக இருக்கும் திரைப்படங்களில் ‘புஷ்பா 2 ‘ படமும் ஒன்று. அல்லு அர்ஜுன் நடிப்பில் சுராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் 15-ஆம் தேதி வெளியாகும் என ஏற்கனவே, அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு விட்டது. எனவே, படம் வெளியாக இன்னும் 2 மாதங்கள் மட்டும் இருக்கும் நிலையில் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளி வைக்க முக்கிய காரணமே படத்தின் படப்பிடிப்பு இன்னும் முழுவதுமாக முடியவில்லையாம். அதைபோல், படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் இன்னும் முடியவில்லை. எனவே, இதற்கு எல்லாம் இன்னும் சில மாதங்கள் தேவை என்பதால் படத்தினை இப்போது ரிலீஸ் செய்தால் சரியாக இருக்காது என படக்குழுவினர் மற்றும் தயாரிப்பாளர்கள் யோசித்து வருகிறார்களாம்.
இன்னும் படம் ஒத்திவைக்கப்படுவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. தகவல்களாக மட்டுமே படம் தள்ளி செல்லவுள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி செல்லவிருக்கும் தகவல் ரசிகர்களுக்கு சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், இந்த திரைப்படத்தில் அல்லு அர்ஜுனுடன் ராஷ்மிகா மந்தனா, ஃபஹத் பாசில், அனசுயா பரத்வாஜ், சுனில், டாலி தனஞ்சய், பவானி கரணம், ஸ்ரீதேஜ், ராவ் ரமேஷ் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
லார்ட்ஸ் : இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் சுற்றுப்பயணத்தில் ஒருநாள் தொடரானது நடைபெற்று வருகிறது. இதற்கு…
சென்னை : மணிமேகலை vs பிரியங்கா இருவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினை, பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்த நிலையில், இப்போது…
சென்னை : படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகர் அஜித் குமார், இன்னொரு பக்கம் கார் ரேஸ் போட்டியில் கலந்து கொள்வதற்கான…
நாமக்கல் : இன்று காலையில் நாமக்கல் குமாரபாளையம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சினிமா பாணியில் வேகமாக சென்ற கண்டெய்னர் லாரியை…
டெல்லி : நேற்று அரசு முறைப்பயணமாக டெல்லிச் சென்ற தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், இன்று காலை பிரதமர் மோடியை…
சென்னை- நவராத்திரி அன்று அம்பிகைக்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நெய்வேத்தியங்கள் படைக்கப்படுகிறது. அதைப்பற்றி இந்த ஆன்மீக செய்தி குறிப்பில் தெரிந்து…