Categories: சினிமா

பருத்திவீரன் விவகாரம் : ஞானவேல் ராஜா மீது மானநஷ்ட வழக்கு தொடரப்போகும் அமீர்?

Published by
பால முருகன்

பருத்திவீரன் படத்தின் சமயத்தில் இருந்தது அந்த படத்தின் இயக்குனர் அமீர் மற்றும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு இருவரும் கடந்த சில ஆண்டுகளாகவே பேசிக்கொள்ளாமல் இருந்தார்கள். பிறகு பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட அமீர் பருத்திவீரன்  படத்தை ரிலீஸ் செய்த போது தான் படாதா பாடு பட்டதாகவும், எனக்கு எதிராக ஞானவேல் ராஜா மற்றும் அவருடைய தரப்பில் சிலர் இருந்ததாக கூறியிருந்தார்.

அவரை தொடர்ந்து அடுத்ததாக ஒரு பேட்டியில் ஞானவேல் ராஜா ” அமீர் என்னை கணக்கு விஷயத்தில் ஏமாற்றி விட்டார் அவர் தான் எங்களுக்கு துரோகம் செய்தவர். அந்த சமயம் எனக்கு சினிமாவை பற்றி அந்த அளவிற்கு எதுவும் தெரியாது என்பதால் கணக்கு விஷயத்தில் என்னை அமீர் ஏமாற்றிவிட்டார். பணத்தை உழைத்து சம்பாதிக்கவேண்டும் அவர் அப்படி சம்பாதிக்காமல் திருடி சம்பாதிக்கிறார்” என கடுமையாக தாக்கி திருடன் என அமீரை கடுமையாக விமர்சனம் செய்து பேசியிருந்தார்.

இவர் இப்படி பேசியவுடன் அமீருக்கு ஆதரவாக சசிகுமார், சமுத்திரக்கனி, சினேகன், பொன்வண்ணன், கரு.பழனியப்பன் உள்ளிட்ட பல பிரபலங்களும் அமீருக்கு ஆதரவாக இறங்கி ஞானவேல் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து தங்களுடைய கண்டனங்களை அறிக்கையின் மூலம் தெரிவித்து இருந்தனர்.

வருத்தம் தெரிவிக்கிற சீனெல்லாம் இங்க செல்லாது!ஞானவேல் ராஜாவுக்கு பதிலடி கொடுத்த சமுத்திரக்கனி!

இந்த விவகாரம் பெரிதாக வெடித்த நிலையில் ஞானவேல் இறுதியாக தான் பேசியது அமீர் அண்ணனுக்கு வருத்தம் அடைய செய்திருந்தது என்றால் அதற்காக நான் இப்போது மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று அறிக்கை ஒன்றையும் வெளியிட்டு இருந்தார். இருந்தாலும் அந்த அறிக்கைக்கு பதில் அறிக்கை வெளியீட்டு அமீர் எதையும் கூறவில்லை.

இதனையடுத்து தற்போது கிடைத்திருக்க கூடிய தகவல் என்னவென்றால், அமீர் இந்த விவகாரத்தில் மிகவும் மன வேதனையில் இருக்கிறாராம். ஏனென்றால், அனைவரும் பார்க்க கூடிய யூடியூபில் ஒரு சேனலின் பேட்டியின் போது திருடன்  என்று தன்னை ஞானவேல் ராஜா கூறியதால்  அமீர் மிகவும் வேதனையில் இருக்கிறாராம். தன்னுடைய மகன் கூட என் இப்படி உங்களை பற்றி சொல்கிறார் என்ற கேள்வியையும் தன்னிடம் கேட்பதாக சிவகுமாருக்கு அமீர் மெசேஜ் செய்தாராம்.

ஆனால், அதற்கு சிவகுமார் எந்த பதிலையும் கூறவில்லையாம். இதனையடுத்து அமீர் இந்த விவகாரத்தை சும்மாக விட கூடாது என்று இருக்கிறாராம். ஞானவேல் பேசியது மிகவும் காயப்படுத்தி இருப்பதன் காரணமாக ஞானவேல் மீது மானநஷ்ட வழக்கு தொடர திட்டமிட்டு இருக்கிறாராம். இந்த தகவலை பிரபல யூடியூப் சேனலான வலைப்பேச்சு தெரிவித்துள்ளது.

மேலும் ஞானவேல் ராஜா வருத்தம் தெரிவித்தாலும் சசிகுமார் மற்றும் சமுத்திரக்கனி இருவரும் வருத்தம் தெரிவிப்பது எல்லாம் பெரிய விஷயம் எல்லாம் இல்லை. எந்த பேட்டியில் அவர் அப்படி பேசினாரா அதே போலவே அனைவருடைய முன்பு மன்னிப்பு கேட்கவேண்டும் என்று கூறியிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Recent Posts

சிறகடிக்க ஆசை சீரியல் -முத்து மீது பழி போடும் மனோஜ்..

சென்னை -சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான எபிசோடில் 50000 லாஸ் ஆனதுக்கு முத்து தான் காரணம் என முத்து மீது…

3 mins ago

SL vs WI : கிரிக்கெட் வரலாற்றில் இதுவே முதல் முறை! தொடரைக் கைப்பற்றி இலங்கை அணி அசத்தல்!

தம்புல்லா : வெஸ்ட் இண்டீஸ் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது. அதில், 3 டி20 போட்டிகள் மற்றும் 3…

22 mins ago

காற்று மாசுபாட்டை குறைக்க டெல்லி அரசின் ஐடியா.! வீதி வீதியாய் வரும் வாகனம்…

டெல்லி :  தலைநகர் டெல்லியின் மிகப் பெரும் பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது காற்று மாசு. கடந்த சில ஆண்டுகளாக இதனை…

51 mins ago

ஐபிஎல் 2025 : கேப்டன் பொறுப்பிலிருந்து வெளியேறுகிறார் ‘ரிஷப் பண்ட்’? காரணம் இதுதான்!

சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறப் போகும் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விரைவில் நடைபெற இருக்கிறது. இதற்கான தீவிர…

1 hour ago

துலாபார வழிபாடும் அதன் பலன்களும் ..!

சென்னை -துன்பங்களை துரத்தியடிக்கும் துலாபாரம் கொடுக்கும் முறை பற்றி இந்த ஆன்மீக செய்தி குறிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம். துலாபாரம்…

1 hour ago

ஆட்டத்தை ஆரம்பித்த விஜய்.! தவெக தொண்டர்களுக்கு அரசியல் பயிலகம் தொடக்கம்…

சென்னை : சினிமாவில் உச்சநட்சத்திரமாக இருந்து தற்போது அரசியல் களத்தில் இறங்கியுள்ள விஜய், தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை…

2 hours ago