பதவியை ராஜினாமா செய்தார் திரையரங்க உரிமையாளர் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்ரமணியம்!

தமிழ்நாடு திரையரங்கம் மற்றும் மல்டிப்ளெக்ஸ் உரிமையாளர்கள் சங்கத்தலைவர் பதவியை திருப்பூர் சுப்ரமணியம் ராஜினாமா செய்துள்ளார்.

Tirupursubramaniam

தமிழ்நாடு திரையரங்கம் மற்றும் மல்டிப்ளெக்ஸ் உரிமையாளர்கள் சங்கத்தலைவர் பதவியை திருப்பூர் சுப்ரமணியம் ராஜினாமா செய்துள்ளார்.

திரையரங்கு உரிமையாளர் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்ரமணியம் திடீரென ராஜினாமா செய்தது திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தனது தனிப்பட்ட காரணங்களால் ராஜினாமா செய்வதாக சுப்ரமணியம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு அறிவித்திருக்கிறார்.

இது குறித்த தனது அறிக்கையில், எனது சொந்த வேலை காரணமாக நமது சங்க தலைவர் பதவியிலிருந்து ராஜீனுமா செய்கிறேன். இது நாள் வரை ஒத்துழைப்பு கொழுத்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி என குறிப்பிட்டுள்ளார்.

அறிய வாய்ப்பு! சினிமாவில் நடிக்க ஆர்வமா? சூர்யா நிறுவனம் வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு!

சமீபத்தில், சல்மான் கான் நடிப்பில் வெளியான ‘டைகர் 3’ படத்தை தீபாவளிக்கு அனுமதியின்றி அவரது தியேட்டரில் அதிகாலை 7 மணி காட்சி ஓட்டப்பட்டது. இதனையடுத்து, அனுமதி இல்லாத காட்சி திரையிட்டதால், திரையரங்கிற்கு மாவட்ட ஆட்சியர் நோட்டீஸ் அனுப்பியது குறிப்பிடத்தக்கது.