பேட்ட ,விஸ்வாசம் இன்று கோலாகலமாக திரையில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிவருகிறது. இதனை ரசிகர்கள் குதூகலமாக கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் மதுரவாயலில் உள்ள ஏ.ஜி.எஸ் திரையரங்கில் ரசிகர்கள் டிக்கெட்களை ஆன்லைனில் முன்பதிவு செய்துள்ளனர்.
ரசிகர்கள் பலரும் 7மணி காட்சிகளை முன்பதிவு செய்துள்ளனர். திரைப்படத்தை காண ரசிகர்கள் திரையரங்கிற்கு மிகுந்த சந்தோஷத்தில் வந்துள்ளனர். அப்போது தியேட்டர் ஊழியர்கள் 7மணி காட்சி கிடையாது, 10 மணி காட்சிதான் என்று கூறியிருக்கிறார்கள். இதனால் ரசிகர்கள் கடும் கோபத்தில் தியேட்டர் ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனை அறிந்து மதுரவாயல் போலீசார் அங்கு வந்தனர் . மேலும் அவர்கள் டிக்கெட் எடுத்த ரசிகர்களை சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். மதுரவாயல் போலீசார் அவர்கள் பேசுகையில் , வி.ஐ.பிக்களுக்காக வைக்கப்பட்டிருந்த 7 மணி காட்சி டிக்கெட்டுகள் தவறுதலாக ஆன்லைனில் விற்பனை ஆகிவிட்டது.மேலும் டிக்கெட் எடுத்தவர்களை அடுத்த காட்சிக்கு அனுமதிப்பதாக தியேட்டர் நிர்வாகம் கூறியுள்ளது என்று அவர்களிடம் கூறியுள்ளனர்.
சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…
சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…
சென்னை : விழுப்புரம் விக்கிரவாண்டியில் அக்.27ல் தவெக மாநாடு நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இது தொடர்பாக…
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…