விவாகரத்து செய்யும் போதும் இருவரும் கொஞ்சம் மனவலி உடனேயே பிரிந்தோம் – சோனியா அகர்வால்.!

Published by
பால முருகன்

இயக்குனர் செல்வராகவன் தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளை படமாக இயக்குவதில் சிறந்தவர் என்று கூறலாம். இவரது இயக்கத்தில் வெளியான துள்ளுவதோ இளமை , ஆயிரத்தில் ஒருவன், காதல்கொண்டேன், புதுப்பேட்டை, 7ஜி ரெம்போ காலனி ஆகிய திரைப்படங்கள் ரசிகர்களுக்கு மனதில் நீங்காத ஒரு படமாக இருக்கிறது.

இதில் காதல் கொண்டடேன் படத்தின் மூலம் நடிகை சோனியா அகர்வால் கதாநாயகியாக அறிமுகமானார். இந்த படத்திற்கு பிறகு 7ஜி ரெயின்போ காலனி மற்றும் புதுப்பேட்டை, உள்ளிட்ட படங்களில் சோனியா அகர்வாலை செல்வராகவன் நடிக்க வைத்தார்.

இதனால் செல்வராகவன்-சோனியாவுக்கும் இடையே காதல் மலர்ந்தது. அதன்பின் இருவரும் கடந்த 2006-ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்கள். ஆனால் இவர்களது திருமண வாழ்க்கை 2010 வரை மட்டுமே நீடித்தது எனவே கூறலாம். 4 வருடங்களுக்கு பின் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பரஸ்பரம் பேசி விவகாரத்து பெற்றுக் கொண்டனர்.

இந்நிலையில் செல்வராகவனுடன் ஏற்பட்ட விபத்து குறித்து சோனியா அகர்வால் சமீபத்தில் பேட்டி ஒன்றில் மனம் திறந்து பேசி உள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பது, ” செல்வராகவனுடன் இணைந்து காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை தொடர்ந்து படங்களில் நடித்தேன். அப்போது அவரின் ஹார்ட் வொர்க் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

பின் இருவரும் காதலிக்க ஆரம்பித்தப் பிறகு திருமணமும் செய்து கொண்டாம். ஒரு சில காரணங்களால் இருவரும் பிரிய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. திருமணம் செய்து கொள்ளும் போது மிகவும் சந்தோஷமாக இருந்தது. அதே போல விவாகரத்து செய்யும் போதும் கொஞ்சம் மனவலி உடனேயே இருவரும் பிரிந்தோம்” என கூறியுள்ளார்.

மேலும் இயக்குனர் செல்வராகவன் மயக்கம் என்ன படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றிய கீதாஞ்சலி என்பவரை கடந்த 2011 ஆம் ஆண்டு திருமணம் ஆண்டு கொண்டார் அவருக்கு 3 குழந்தைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

7 mins ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

2 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

2 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

2 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

2 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

3 hours ago