நடிகர் ராகவா லாரன்ஸ் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் சினிமாவில் நடிப்பது மட்டுமல்லாது, சமூக அக்கறை கொண்டவராகவும் செயல்பட்டு வருகிறார். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பதாக, சீமான் ஆதரவாளரும், தயாரிப்பாளருமான சுரேஷ் காமாட்சி என்பவர், ஊனமுற்ற குழந்தைகளை ஏளனமாக பேசியதாக தகவல்கள் வெளியானது.
இந்நிலையில்,இதற்க்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், நடிகர் ராகவா லாரன்ஸ் தனது முகநூல் பக்கத்தில் ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார். இதனையடுத்து, பத்துக்கும் மேற்பட்ட திருநங்கைகள் வேப்பேரி, போராக் சாரியில் உள்ள அம்மன் கோவிலுக்கு முன்பாக ராகவா லாரன்சுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இது குறித்து அவர்கள் கூறுகையில், நடிகர் ராகவா லாரன்ஸ் உடல் ஊனமுற்றோர், மனவளர்ச்சி குன்றியோர், திருநங்கைகள் என அனைவருக்கும் பல ஆண்டுகளாக சேவை செய்து வருகிறார் என்றும், உடனடியாக ராகவா லாரன்ஸ் அண்ணனிடம் சுரேஷ் காமாட்சி அவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.
மேலும், சீமான் அண்ணன் மீது நாங்கள் மிகப் பெரிய மரியாதை வைத்து இருக்கிறோம் என்றும் தெரிவித்துள்ளார்கள்.
.
சென்னை : தமிழக அமைச்சரவையில் நேற்று அனைவரும் எதிர்பார்தத பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. குறிப்பாக, திமுகவினர் அதிகம் எதிர்நோக்கி காத்திருந்த…
சென்னை : நீண்ட நாட்களாக கூறப்பட்டு வந்த தமிழ்நாடு அமைச்சரவை மாற்றம் குறித்த முக்கிய அறிவிப்பு நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியானது.…
மும்பை : இந்த ஆண்டின் இறுதியில் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது நடைபெற இருக்கிறது. கடந்த 2 மாதங்களாக…
சென்னை : கடந்த சில வாரங்களாகவே தமிழகத்தில், அமைச்சரவை மாற்றம் தொடர்பான விஷயங்கள் தான் பெரிதும் பேசும் பொருளாகவே இருந்து…
லார்ட்ஸ் : இங்கிலாந்து அணியின் முக்கிய தூணாக விளங்கும் வேக பந்து வீச்சாளரான ஜோப்ரா ஆர்ச்சர் கடந்த 2019 உலகக் கோப்பை…
சென்னை : இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கே இடையே நடைபெற்று வரும் ஒருநாள் தொடரில் நேற்று 4-வது போட்டியானது நடைபெற்றது.…