சினிமா

வெளியான ‘லியோ’ டிரைலர் …தியேட்டரை நொறுக்கிய ரசிகர்கள்..!

Published by
murugan

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கைதி, மாஸ்டர், விக்ரம் உள்ளிட்ட படங்களை இயக்கிய  ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளார். இதைதொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் விஜய்யுடன் இரண்டாவது முறையாக கைகோர்த்து  ‘லியோ’ திரைப்படத்தை இயக்கியுள்ளார். இதனால், இந்த படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.

இப்படத்திற்கு இசைவெளியீட்டு விழா நடைபெறாத காரணத்தால் டிரைலர் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு இருந்தநிலையில்  படத்தின் டிரைலர் இன்று வெளியாகும் என முன்னதாக படத்தின் தயாரிப்பு  நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தது.

இதனையடுத்து , படக்குழுவின் அறிவிப்பின் படி  படத்தின் டிரைலர் இன்று மாலை 6.30 மணிக்கு வெளியானது. டிரைலரை கூட்டமாக ரசிக்கவேண்டும் என்பதற்காக பெரிய திரையரங்குகளில்  டிரைலர் காட்சிப்படுத்தப்பட்டது. டிரைலரை ரசிகர்களும் மிகவும் மகிழ்ச்சியாக பார்த்து ரசித்தார்கள்.

டிரைலர் காண சென்னையில் உள்ள  ரோகினி  திரையரங்கில்  ஏராளமான ரசிகர்கள் கூட்டம் குவிந்தனர்.  இந்நிலையில், ரோகினி திரையரங்கில் ‘லியோ’ படத்தின் டிரைலரை திரையிட்டப்போது ரசிகர்கள் அங்கு உள்ள இருக்கைகளை சேதப்படுத்தினர். ஏற்கனவே லியோ திரைப்படத்திற்கு இசை வெளியீட்டு விழாவும் நடைபெறவில்லை என்ற காரணத்தால் விஜய் ரசிகர்கள் வருத்தத்தில் இருந்தனர்.

எனவே, டிரைலர் திரையரங்குகளில் வெளியிடப்பட்ட காரணத்தால் பார்க்க செல்வதற்கு முன்பே செய்தியாளர்களிடம் இசை வெளியீட்டு விழா வைக்கலான இது தான் என்பது போல பேசிவிட்டு சென்றார்கள். மக்கள் கூட்டமும் ரோகினி  திரையரங்கில்  அதிகாக இருந்த காரணத்தால் இருக்கைகளை மிகவும் சேதப்படுத்தினார்கள்.

இதைப்போலவே, கடந்த ஜனவரி 11-ஆம் தேதி வாரிசு மற்றும் துணிவு ஆகிய திரைப்படங்கள் ஒரே தினத்தில் வெளியானது. எனவே, இரண்டு நடிகர்களின் ரசிகர்களும் திரையரங்குகளில் கூட்டமாக கூடி மாற்றி மாற்றி பேனர்களை கிழித்தார்கள். இதனால் இரு ரசிகர்களுக்கிடையே மோதலும் ஏற்பட்டது.   அதைப்போலவே படத்தின் முதல் நாள் முதல் காட்சி தொடங்கியபோது விஜய் மற்றும் அஜித் ரசிகர்கள் ரோகினிதியேட்டரின் கண்ணாடிகளை உடைத்துக்கொண்டு வேகமாக உள்ளே சென்றார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Published by
murugan

Recent Posts

பாகிஸ்தான் ராணுவ பிடியில் இந்திய ராணுவ வீரர்! துப்பாக்கி, வாக்கி டாக்கி பறிமுதல்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் பகுதி பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில்,…

27 minutes ago

உடனே வெளியேறுங்கள்.., 27ம் தேதி வரை தான் டைம்.! பாக். நாட்டினருக்கு விசா சேவை நிறுத்தம்.!

டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, மத்திய அரசு தற்போது கடுமையான நிலைப்பாட்டை எடுத்து வருகிறது. நேற்றைய தினம்…

58 minutes ago

இந்தியாவின் அடுத்த நகர்வு.., போர்க்கப்பலில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணை சோதனை வெற்றி!

சூரத்: பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து ஒவ்வொரு துறையிலும் தனது பலத்தை அதிகரிப்பதில் இந்தியா தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது. வாகா…

1 hour ago

இந்தியா vs பாகிஸ்தான் : நதிநீர் நிறுத்தம், மருத்துவ சேவை நிறுத்தம்., பாக். வான்வழி தடை!

டெல்லி : பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில், இந்த தாக்குதலை அடுத்து இந்தியா -…

2 hours ago

பஹல்காம் தாக்குதல் : “முஸ்லீம்கள் – இந்துக்களை தனித்தனியாக பிரிக்க சொன்னார்கள்?” தந்தையை இழந்த சிறுவன் பகீர் தகவல்!

காந்திநகர் : நேற்று முன்தினம் காஷ்மீர் மாநிலம் அனந்த்நாத் மாவட்டத்தில் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய…

2 hours ago

காஷ்மீர் தாக்குதல்: “நாங்கள் இல்லை..” – கண்ணீர்விட்டு கதறும் லஷ்கர்-இ-தொய்பா.!

காஷ்மீர் : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு தான் பொறுப்பல்ல என்று லஷ்கர்-இ-தொய்பா (LeT) துணைத் தலைவர் சைஃபுல்லா…

3 hours ago