இசை நிகழ்ச்சியில் பாடல் ‘அப்பாகிட்ட அனுமதி வாங்கியாச்சு’! கார்த்திக் ராஜா பேச்சு!

Published by
பால முருகன்

கார்த்திக் ராஜா : இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா வரும் ஆகஸ்ட் 17-ஆம் தேதி கோவை ஹிந்துஸ்தான் கலை அறிவியல் கல்லுாரியில் கிங் ஆப் கிங்ஸ் 2024 என்ற பெயரில் இசை நிகழ்ச்சியை நடத்த இருக்கிறார்.  இந்த இசை நிகழ்ச்சியை ‘பி.கே., என்டர்டெயின்மென்ட் நிறுவனமும்,  ‘யெஸ் பாஸ்’ நிறுவனமும் இணைந்து வழங்க இருக்கிறது. இந்த இசை நிகழ்ச்சியில் கார்த்திக் ராஜாவின் தந்தை இளையராஜாவின் பாடல்களும் பாட இருப்பதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து, அப்பா இளையராஜாவின் பாடல்களையும் எழுத்துப்பூர்வமாக அனுமதி பெற்றுத் தான் இசை நிகழ்ச்சியில் பாட உள்ளேன் என செய்தியார்களை சந்தித்தபோது கார்த்திக் ராஜா கூறியுள்ளார். இது குறித்து பேசிய கார்த்திக் ராஜா ” முன்னதாக இந்த இசை நிகழ்ச்சியை நாங்கள் மலேசியாவில் நடத்த தான் திட்டமிட்டு இருந்தோம்.

ஆனால், அங்கு நடத்தமுடியாமல் போய்விட்டது. இந்த நிகழ்ச்சி கண்டிப்பாக அனைவரையும் மகிழ்விக்கும் வகையில் இருக்கும். அப்பா இளையராஜாவுடைய பாடல்களும் பாடபோகிறோம். சரியாக காப்புரிமை குறித்து ஆய்வு செய்து எந்த பாடல்களை பாடலாம் என்பதை சரியாகவும் தேர்வு செய்து இருக்கிறேன். அப்பாவிடம் சரியான அனுமதி பெற்று தான் பாடல்களை பாட இருக்கிறேன். முக்கியமாக எழுத்துப்பூர்வமாக அனுமதி பெற்று பாடப்போகிறேன்.

இசை நிகழ்ச்சி 3 முதல் 4 மணி நேரம் நடைபெறும் கிட்டத்தட்ட 35 பாடல்கள் தேர்வு செய்து இருக்கிறோம். அனைத்தும் கண்டிப்பாக பிடிக்கும். இப்போது நான் சில படங்களுக்கு இசையமைத்து வருகிறேன். அடுத்த 2 மாதங்களில் நான் இசையமைத்துள்ள 2 படங்கள் வெளியாக உள்ளது” எனவும் கார்த்திக் ராஜா தெரிவித்துள்ளார்.

Published by
பால முருகன்

Recent Posts

“ஹிந்தி தான் பேசுவேன்” அடம்பிடித்த பெண் ஊழியர்! மகாராஷ்டிராவில் வெடித்த மொழி சர்ச்சை!

மகாராஷ்டிரா :தென்னிந்தியாவில் ஏற்கனவே, மொழிப் போர் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. மத்திய அரசு  மும்மொழிக்கொள்கையை அமல்படுத்த தீவிரம் காட்டி வருகிறது. இது…

7 hours ago

இனி இப்படிதான்! ஊட்டி, கொடைக்கானல் செல்வோர் கவனத்திற்கு!! ஐகோர்ட் போட்ட அதிரடி உத்தரவு.!

கொடைக்கானல்: ஊட்டி, கொடைக்கானல் சுற்றுலா வாகனங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் புதிய கட்டுப்பாடு விதித்து உத்தரவிட்டுள்ளது. கோடை விடுமுறையை முன்னிட்டு…

8 hours ago

“வெங்கடேஷ் ஐயருக்குப் பதிலாக ரஹானே”… கேப்டனை மாற்றியது ஏன்? கேகேஆர் விளக்கம்.!

டெல்லி : ஐபிஎல் 2025 மார்ச் 22 முதல் தொடங்க உள்ளது, முதல் போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைத்தனத்தில்…

9 hours ago

பட்ஜெட்டில் முக்கிய ‘அடையாள’ மாற்றம் : தமிழுக்கு ‘ரூ’ முக்கியத்துவம்!

சென்னை : நாளை தமிழக அரசு சட்டப்பேரவையில் மாநில பட்ஜெட் 2025 - 2026-ஐ தாக்கல் செய்ய உள்ளது. முதலமைச்சர்…

10 hours ago

அவரு கண்ணுல தெரியுது! 2027 உலகக்கோப்பைக்கு ஸ்கெட்ச் போட்ட ரோஹித்! ரிக்கி பாண்டிங் கணிப்பு!

டெல்லி : ரோஹித் சர்மா சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் இருந்து இப்போது ஓய்வு பெறவில்லை என திட்டவட்டமாக தெரிவித்த நிலையில்.…

11 hours ago

நாளை தமிழக பட்ஜெட் : ஆய்வறிக்கையை வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின்.!

சென்னை : தமிழ்நாடு அரசின் 2025-26 நிதியாண்டுக்கான பட்ஜெட், நிதியமைச்சர் தங்கம் தென்னரசு நாளை (மார்ச் 14, 2025) காலை…

12 hours ago