மணிரத்னம் கொடுத்த சம்பளம்! கடுப்பாகி படத்திலிருந்து விலகிய ஜெயம் ரவி?

Published by
பால முருகன்

சென்னை : தக்லைஃப் படத்தில் இருந்து ஜெயம் ரவி விலகியதற்கான காரணம் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது.

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் தக்லைஃப் படத்தில் ஜெயம் ரவி முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், வேறொரு படத்தின் தேதி பிரச்சனை காரணமாக படத்தில் இருந்து ஜெயம் ரவி விலகியதாகவும், படத்தில் அவருடைய கதாபாத்திரத்தில் சிம்பு நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியானது.

ஆனால், உண்மையில் சிம்பு ஜெயம் ரவி கதாபாத்திரத்தில் நடிக்கவில்லையாம், அதைப்போல ஜெயம் ரவியும் தேதி பிரச்சனை காரணமாக படத்தில் நடிக்க மறுக்கவில்லையாம். தக் லைஃப் படத்தை மணிரத்னம் கமல்ஹாசனுடன் இணைந்து தயாரிக்கிறார். எனவே, படத்தில் ஜெயம் ரவி வரும் காட்சியே குறைவான காட்சி தானாம். இதனால்,  குறைவான நாட்கள் தான் அவருடைய கால்ஷீட் தேவைப்பட்டதாம்.

எனவே, குறைவான நாட்கள் தான் உங்களுடைய கால்ஷீட் வேண்டும் இவ்வளவு தான் சம்பளம் தருவேன் என ஜெயம் ரவி கேட்ட சம்பளத்தை விட குறைவாக தான் கொடுப்பேன் என மணிரத்னம் கூறினாராம். ஆனால், இதற்கு ஜெயம் ரவி சற்றுக்கடுப்பாகி  ஏற்றுக் கொள்ளவில்லையாம். எனவே. சம்பளம் குறைவாக இருக்கிறது என காரணம் காட்டி படத்தில் இருந்து ஜெயம் ரவி விலகினாராம்.

அதைப்போல, தக்லைஃப் படத்தில் ஜெயம்ரவி நடிக்க இருந்த கதாபாத்திரத்தில் சிம்பு நடிக்கவில்லையாம். படத்தில் சிம்புக்காகவே ஒரு காதாபாத்திரம் உருவாக்கப்பட்டு ஜெயம் ரவி விலகிய உடனே படத்தின் கதையில் இயக்குனர்  மணிரத்னம் மாற்றம் செய்துவிட்டாராம். படம் முழுவதும் சிம்பு மற்றும் கமல்ஹாசனை சுற்றி தான் நகருமாம். இந்த தகவலை பிரபல யூடியூப் சேனலான வலைப்பேச்சு தெரிவித்துள்ளது.

மேலும், இந்த தக்லைஃப் திரிஷா, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி, அபிராமி, நாசர், சன்யா மல்ஹோத்ரா உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள். படத்திற்க்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். படத்தின் படப்பிடிப்பும் மும்மரமாக நடைபெற்று வருகிறது.

Published by
பால முருகன்

Recent Posts

RCB vs RR : சொந்த மைதானத்தில் பெங்களூருவின் முதல் வெற்றி! போராடி தோற்ற ராஜஸ்தான்!

பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…

8 hours ago

இனி இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிகள் கிடையாது! பிசிசிஐ அதிரடி முடிவு!

டெல்லி : நேற்று முன்தினம் (ஏப்ரல் 22) காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக…

9 hours ago

RCB vs RR : விராட் கோலி அதிரடி ஆட்டம்! ராஜஸ்தான் வெற்றிக்கு 206 ரன்கள் இலக்கு!

பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…

10 hours ago

RCB vs RR : சொந்தமண்ணில் வெற்றிபெறுமா பெங்களுரு? டாஸ் வென்ற ராஜஸ்தான்!

பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…

12 hours ago

இது போர் தான்.., இந்தியா – பாகிஸ்தானின் அடுத்தடுத்த அதிரடி நடவடிக்கைகள்…

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையான தொடர் 'தடை' நடவடிக்கைகள் இரு நாட்டு…

13 hours ago

பாகிஸ்தான் ராணுவ பிடியில் இந்திய ராணுவ வீரர்! துப்பாக்கி, வாக்கி டாக்கி பறிமுதல்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் பகுதி பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில்,…

13 hours ago