Rashmika Mandanna [file image]
நடிகை ராஷ்மிகா மந்தனா குறுகிய காலத்திலே மிகவும் பிரபலமாகி முன்னணி நடிகையாக வளர்ந்துவிட்டார் என்றே சொல்லலாம். இப்போது அவருக்கு இருக்கும் ரசிகர்கள் கூட்டம் மற்றும் அவருக்கு இருக்கும் மார்க்கெட் பற்றி சொல்லியே தெரியவேண்டாம். எனவே ரசிகர்களுக்காகவே நல்ல கதாபாத்திரங்களையும் தேர்வு செய்து படங்களில் நடித்தும் வருகிறார்.
படங்களில் நடிப்பது மட்டுமின்றி தன்னுடைய புகைப்படங்களை வெளியிடுவதன் மூலமும் ரசிகர்களை குஷி படுத்தி வருகிறார். அதிகமாக சேலையில் ஆர்வம் காட்டும் நடிகை ராஷ்மிகா மந்தனா அடிக்கடி சேலை அணிந்துகொன்டு புகைப்படங்களையும் வெளியீட்டு வருகிறார். குறிப்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட ரோஸ் நிறசேலையில் சில அட்டகாசமான புகைப்படங்களை வெளியீட்டு இருந்தார்.
பேட்டி ஒன்றில் கூட உங்களுடைய க்ரஸ் யார் என்று கேட்டதற்கு சேலை தான் என்னுடைய க்ரஸ் என்று கூறியிருந்தார். அந்த அளவிற்கு சேலை மீது ரொம்ப பிரியம் கொண்ட நடிகை ராஷ்மிகா சேலை வாங்குவதில் செலவு அதிகமாக செய்து வருவதாக கூறப்படுகிறது. அந்த வகையில், அவர் சமீபத்தில் அணிந்து புகைப்படங்களை வெளியீட்டு இருந்தார் ரோஸ் நிற சேலையின் விலை எவ்வளவு என்பது குறித்த தகவல் கிடைத்துள்ளது.
இது ரொம்ப ஓவர்! படக்குழுவுக்கு கண்டிஷன் போடும் ராஷ்மிகா மந்தனா?
அதன்படி, ராஷ்மிகா மந்தனா அணிந்து இருக்கும் அந்த சேலையில் விலை கிட்டத்தட்ட 1,90,000 இருக்குமாம். இந்த சேலையை அவருக்கு வடிவமைத்து கொடுத்தது பிரபல டிசைனரான அர்பிதா மேத்தா தான் வடிவமைத்து கொடுத்தாராம். ராஷ்மிகா மந்தனா அணிந்துள்ள அந்த சேலையின் விலையை பார்த்து அனைவரும் மிரண்டு போய் உள்ளனர்.
மேலும் நடிகை ராஷ்மிகா மந்தனா கடைசியாக அனிமல் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த அனிமல் திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகை ராஷ்மிகா மந்தனா அடுத்ததாக அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக புஷ்பா 2 திரைப்படத்திழும் நடித்து வருகிறார். இந்த புஷ்பா 2 திரைப்படம் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : மும்மொழி கொள்கை விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ள நிலையில், மூன்றாவது மொழி ஏதேனும் என குறிப்பிட்டு மத்திய…
சென்னை : தமிழகத்தில் கோடை காலம் நெருங்கி உள்ள நிலையில் வழக்கமாக ஏப்ரல், மே மாதங்களில் தான் வெயிலின் தாக்கம் அதிகமாக…
சென்னை : அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற பிறகு அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை அமெரிக்காவில் இருந்து அவர்கள் சொந்த…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் விரைவில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் குடிமக்கள் அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு தடைவிதிக்க…
சென்னை : மத்திய அரசின் புதிய தேசிய கல்வி கொள்கையின் படி பள்ளி குழந்தைகள் தாய் மொழி, ஆங்கிலம் தவிர்த்து…
சென்னை : நடிகை நயன்தாரா பொதுவாகவே தான் நடித்த படங்களுக்கு ப்ரோமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றால் அந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது இல்லை.…