வடசென்னை 2 : தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு கேங்ஸ்டர் படங்களின் பட்டியலில் இருப்பது வெற்றி மாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான வடசென்னை படத்தை சொல்லலாம். கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் 50 கோடிகளுக்கு மேல் வசூல் செய்தது. படத்தின் முதல் பாகம் முடியும் போது அனுப்புவின் எழுச்சி தொடரும் என காட்டப்பட்டிருக்கும்.
எனவே, இரண்டாவது பாகம் எப்போது உருவாகும்? அன்புவின் எழுச்சியை எப்போது பார்க்கலாம் என்று தான் ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். இருப்பினும், நடிகர் தனுஷ் மற்றும் வெற்றிமாறன் தங்களுடைய கமிட் ஆகி இருக்கும் படங்களில் பிசியாக இருந்த காரணத்தால் இன்னும் வடசென்னை 2 படம் தொடங்கப்படாமல் இருக்கிறது. வரும் ஆண்டுகளில் தொடங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
வடசென்னை படத்தில் எல்லாருடைய கதாபாத்திரமும் பெரிய அளவில் பேசப்பட்டது. அதில் குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் ஆண்ட்ரியா நடித்த சந்திரா கதாபாத்திரத்தை சொல்லலாம். இந்நிலையில், சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட நடிகை ஆண்ட்ரியா வடசென்னை 2 குறித்து பேசியுள்ளார்.
புதுச்சேரியில் நடந்த நகைக்கடை திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நடிகை ஆண்ட்ரியா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது ” வடசென்னை 2 எடுப்பார்களா? இல்லையா? என்பது பற்றி வெற்றிமாறனிடம் தான் கேட்கவேண்டும். அவர் எடுத்து வடசென்னை 2 வந்தால் கண்டிப்பாக சந்திரா கதாபாத்திரத்தில் நான் நடிப்பேன். அதில் எந்த சந்தேகமும் இல்லை” என தெரிவித்துள்ளார். ஆண்ட்ரியா கூறியதை பார்த்த ரசிகர்கள் வடசென்னை அன்புவின் எழுச்சிக்கு காத்திருக்கிறோம் என கூறி வருகிறார்கள்.
சென்னை : இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சஞ்சனா, சுவாசிகா ஆகியோர் நடித்துள்ள 'லப்பர்…
ஆந்திரா : ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சியில் திருப்பதி கோவிலின் பிரசாத லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர மாநில…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக செயல்பட்டு வந்த மணிமேகலை நிகழ்ச்சியில் பிரியங்கா தன்னுடைய வேலையை செய்யவிடாமல் அவருடைய…
ஆந்திர பிரதேசம் : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி பிரசாதமாக அளிக்கப்படும் லட்டு தயாரிக்க, பயன்படுத்தப்படும் நெய்யில், மீன் எண்ணெய்,…
சென்னை -சத்தான பாசிப்பயிறு லட்டு செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பாசிப்பயிறு- ஒரு…
ஆந்திரா : உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு காலகாலமாக வழங்கப்பட்டு வருகிறது. பக்தர்களிடையே…