உண்மை சம்பவத்தில் எடுக்கப்போகும் புது படம்…போலீசாக மிரட்ட வருகிறார் தனுஷ்.?!

Published by
பால முருகன்

நடிகர் தனுஷ் தற்போது நடித்துமுடித்துள்ள வாத்தி திரைப்படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 17-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்தை பார்க்க அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளனர்.  இந்த திரைப்படத்தை தொடர்ந்து அடுத்தாக நடிகர் தனுஷ் அருண் மாதேஷ் வரன் இயக்கத்தில் உருவாகி வரும் “கேப்டன் மில்லர்” படத்தில் நடித்து வருகிறார்.

Captain Miller
Captain Miller [Image Source: Twitter ]

இந்த திரைப்படத்தில் நடித்து முடித்த பிறகு அடுத்ததாக, நடிகர் தனுஷ் பிரபல இயக்குனரான எச்.வினோத் இயக்கத்தில் உருவாகவுள்ள திரைப்படத்தில் நடிக்கவுள்ளாராம். அந்த படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரிக்கவுள்ளதாகவும் தகவல்கள் கசிந்துள்ளது.

இதையும் படியுங்களேன்- அந்த விஷயம் ரொம்ப ரொம்ப முக்கியம்…நடிகை நிதி அகர்வால் ஓபன் டாக்.!

H Vinoth And Dhanush [Image Source: Twitter ]

இந்த திரைப்படம் ஒரு உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது. சமீபத்திய பேட்டி ஒன்றில் கூட தான் இயக்கும் அடுத்த படம் ஒரு உண்மை சம்பவத்தை வைத்து எடுக்கப்படவுள்ளதாகவும், போலீஸ் அதிகாரி ஒருவர் தன்னிடம் கூறிய கதை என்றும் தெரிவித்திருந்தார்.

Dhanush And HVinoth [Image Source : Google]

எனவே அந்த உண்மை சம்பவ கதையை தான் இயக்குனர் எச்.வினோத் படமாக இயக்கவுள்ளாராம். மேலும், இந்த திரைப்படத்தில் நடிகர் தனுஷ் போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளாராம். எந்த கதாபாத்திரங்கள் கொடுத்தாலும் அதனை அருமையாக நடித்துக்கொடுக்க கூடிய தனுஷ், இந்த படத்தில் போலீசாக நடிக்கவுள்ளதால் படத்தின் மீது எதிர்பார்ப்புகள் அதிகாமாகியுள்ளது.

Recent Posts

IND vs NZ : ‘ஒரு கேப்டனாக வேதனை அடைந்தேன்’.. ரோஹித் சர்மா பேச்சு!

பெங்களூர் : இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாளானது மழையின் காரணமாக நடைபெறாமல்…

38 mins ago

‘நவம்பர்… தமிழகத்திற்கு அதிக மழை கொண்டு வரும்’ – விளக்கம் கொடுத்த வெதர்மேன்!

சென்னை : கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் கனமழை பெய்து வந்த நிலையில் தற்போது அடுத்ததாக வரும் அக்-20 ம்…

43 mins ago

ஹமாஸ் தலைவர் உயிரிழப்பு : “மீதம் இருப்பவர்களையும் அழிப்போம்” – நெதென்யாகு சபதம்!

ஜெருசலேம் : காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும், இஸ்ரேல் ராணுவத்திற்கும் இடையே கடந்த ஒரு வருட காலமாக போர்…

1 hour ago

காலை 10 மணி வரை இந்த 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்!

சென்னை : வங்க கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று கரையைக் கடந்தது. இதனால், தமிழகம் மற்றும்…

2 hours ago

பை பை ஆஸி.! இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது தென்னாப்பிரிக்கா மகளிர் அணி!

துபாய் : நடைபெற்று வரும் மகளிர் உலகக் கோப்பை தொடரில் முதல் அரை இறுதிப் போட்டியானது இன்று நடைபெற்றது. இந்தப்…

10 hours ago

நாளை எந்தெந்த இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு? வானிலை மையம் கொடுத்த அலர்ட்!

சென்னை : மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று…

13 hours ago