சூர்யா ரசிகர்கள் மட்டுமின்றி அணைத்து சினிமா ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் திரைப்படம் “வாடிவாசல்”. ஜல்லிக்கட்டு கதையை மையமாக வைத்து இந்த திரைப்படம் உருவாகவுள்ளது. இந்த படத்தை இயக்குனர் வெற்றிமாறன் இயக்குவதால் படத்தின் மீது மிகவும் எதிர்பார்ப்பு உள்ளது.
இந்த படத்தின் படப்பிடிப்பு வருகின்ற ஜூலை மாதம் முதல் தொடங்கப்படவுள்ளது. சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் பிரம்மாண்டமாக ஜல்லிக்கட்டு செட் அமைத்து படத்தின் டெஸ்ட் ஷுட்டிங் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலானது.
இந்த படத்தை தயாரிப்பாளர் கலைப்புலி தாணு தயாரிக்கிறார். இந்த திரைப்படம் தயாரிக்க அதிக பட்ஜெட் தேவைப்படுவதால் கலைப்புலி தாணு தற்போது ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
அது என்னவென்றால், கலைப்புலி தாணு வாடிவாசல் திரைப்படத்தை ஜீ ஸ்டூடியோ நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்க உள்ளாராம்.இந்த படத்தை ஜீ ஸ்டூடியோஸ் தயாரிப்பதன் மூலம் வாடிவாசல் திரைப்படத்திற்கான தொலைக்காட்சி உரிமம் மற்றும் ஓடிடி உரிமம் ஆகியவற்றை ஜீ நிறுவனமே பெற்றுக் கொள்ளும் என கூறப்படுகிறது.
இதற்கு முன்பு அஜித் நடிப்பில் வெளியான வலிமை படத்தை போனிகபூர் ஜீ ஸ்டூடியோஸ் உடன் இணைந்து தயாரித்து இருந்தார். இதனை தொடர்ந்து கலைப்புலி தாணுவும் அதே பாணியை கையில் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதி போட்டி இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில்…
சென்னை : தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட்டு கொடுப்பதாக ஒப்பந்தம் செய்யவில்லை என இபிஎஸ் பேசியுள்ளது தேமுதிகவை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. கடந்த…
பெங்களூரு : துபாயிலிருந்து தங்கம் கடத்தியதாக நடிகை ரான்யா ராவ் கைது செய்யபட்டார். கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியொருவரின் நெருங்கிய உறவினரான…
துபாய் : 2025 -ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதி போட்டி இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று…
துபாய் : இந்தியா என்றாலே எனக்கு பிடிக்கும் என்பது போல ஐசிசி போட்டிகளில் ஆஸ்ரேலியா அணியின் தொடக்க ஆட்டக்காரர் டிராவிஸ்…
சென்னை : வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி அஜித்தின் குட் பேட் அக்லி, மற்றும் தனுஷின் இட்லி கடை ஆகிய படங்கள்…