இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிகர் யாஷ் நடிப்பில் கடந்த 14-ஆம் தேதி வெளியான கேஜிஎப் 2 திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பைப் பெற்று வருகிறது. உலகம் முழுவதும் 1000 கோடி வசூலைக் கடந்து இன்னும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்த படத்தின் முடிவில் கேஜிஎப்- 3 தொடங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் மூன்றாவது பாகத்தை பார்க்க காத்துள்ளனர். அதற்கான முதற்கட்ட பணிகள் தொடங்கவிட்டது.
இந்த நிலையில் . பிரசாந்த் நீல் தற்போது நடிகர் பிரபாசை வைத்து சலார் என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மூன்று மாதத்தில் படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு விரைவில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.
இந்த படத்தை முடித்த பிறகு இயக்குனர் பிரசாந்த் நீல் கேஜிஎப் 3 படத்திற்கான வேலையை தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனையடுத்து, தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால் கேஜிஎப் 3 படத்தில் சில காட்சிகளில் நடிகர் பிரபாஸ் வருகிறாராம். இதனால் கூடுதலாக படத்தின் மீது எதிர்பார்ப்பு நிலவியுள்ளது.
இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக…
டெல்லி : கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான தமிழ் திரைப்படமான பொன்னியின் செல்வன் 2 (PS2) இல் இடம்பெற்ற…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொழில்துறை தொடர்பான மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது.…
உதகை : ஊட்டி ராஜ்பவன் மாளிகையில் இன்று (ஏப்.25) காலை துணைவேந்தர்கள் மாநாடு தொடங்கியது. மாநாட்டை குடியரசு துணைத் தலைவர்…
கொச்சி: நாட்டையே உலுக்கிய கடந்த செவ்வாய்க்கிழமை ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த கொடிய தீவிரவாத தாக்குதலில் தனது தந்தையை இழந்த கொச்சியைச்…
இஸ்லாமாபாத் : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பயங்கரவாத சம்பவத்தைத் தொடர்ந்து இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதட்டங்கள் அதிகரித்துள்ளன. முதலில் இந்தியா சிந்து…