பழங்குடியின மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கிய சினிமா பின்னணி பாடகர் மனோ.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
ஏழை, எளிய மக்கள் பலரும் ஒருவேளை உணவிற்கு கூட வழியில்லாமல் தவித்து வருகின்றனர். இந்நிலையில், அரசியல் மற்றும் சினிமா பிரபலங்கள் பலரும் மக்களுக்கு தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர்.
இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த எருக்குவாய்கண்டிகை கிராமத்தில் உள்ள பழங்குடியின மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வில், சினிமா பின்னணி பாடகர் மனோ கலந்து நிவாரண உதவி வழங்கும் நிகழ்வை துவங்கி வைத்தார்.
அப்பகுதியில், தெலுங்கு பேசுபவர்களும் உள்ளனர் என்பதால் கொரோனா குறித்த விழிப்புணர்வை தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் பாடகர் மனோ எடுத்து கூறி, சினிமா பாடல்களை பாடி மக்களை உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளார்.
டெல்லி : நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதியது.…
சென்னை : கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை உயர்ந்து இல்லத்தரசிகளுக்கு அதிர்ச்சி கொடுத்து வரும் நிலையில், ஏப்ரல் 16,…
சென்னை : சுற்றுலா மற்றும் இந்து சமய அறநிலையத்துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்திற்காக தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தற்போது…
கடலூர் : மாவட்டம் கருவேப்பிலங்குறிச்சியில் காவல்துறையிடம் சிக்கிய குற்றவாளி தனக்கு பிரியாணி வாங்கி கொடுத்து அடிக்கும்படி கேட்டுக்கொண்ட வீடியோ தான் தற்போது…
சீனா : அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் அயல்நாட்டு பொருட்களுக்கான பரஸ்பர வரி விதிப்பை அண்மையில்…
விழுப்புரம் : சாதிய பாகுபாடு , அதனால் ஏற்பட்ட இருதரப்பு மோதல் காரணமாக 22 மாதங்களாக மூடி இருந்த திரௌபதி…