SP Balasubramaniam [file image]
S.P.B தமிழ் சினிமாவில் எத்தனையோ பாடகர்கள் வந்தாலும் பாடகர் எஸ் பி பாலசுப்பிரமணியம் பாடிய பாடல்கள் என்றுமே காலத்தால் அழியாதவையாக இருக்கும் என்றே சொல்லலாம். அவர் இந்த மண்ணை விட்டு மறைந்தாலும் அவருடைய குரல் என்றுமே மக்கள் மனதில் நீங்காத இடத்தில் இருக்கும். அந்த அளவிற்கு மனதிற்கு நெருக்கமான பல பாடல்களை எஸ் பி பாலசுப்பிரமணியம் பாடி கொடுத்து இருக்கிறார்.
தமிழ் மொழியில் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என எல்லா மொழிகளிலும் எஸ் பி பாலசுப்பிரமணியம் பாடல்களை பாடி இருக்கிறார். கிட்டத்தட்ட 16 மொழிகளில் 50,000 க்கும் மேற்பட்ட பாடல்களை பாடிய ஒரு பாடகர் என்ற கின்னஸ் உலக சாதனையைப் படைத்து இருக்கிறார். இப்படி பல பாடல்களை பாடி இருக்கும் எஸ் பி பாலசுப்பிரமணியம் ஆரம்ப காலத்தில் பாடல்களை பாடும்போது ஒரு இசையமைப்பாளர் அவரை பயங்கரமாக திட்டனராம்.
பயங்கரமாக திட்டிய காரணத்தால் எஸ் பி பாலசுப்பிரமணியம் சற்று கண்கலங்கினாராம். ஆரம்ப காலத்தில் எஸ் பி பாலசுப்பிரமணியம் பாடகி எல் ஆர் ஈஸ்வரியுடன் இணைந்து ஒரு பாடலை பாடி வந்தாராம். அந்த பாடலை மறைந்த இசையமைப்பாளர் சத்தியம் தான் இசையமைத்து வந்தாராம். அந்த பாடலை பாடும்போது எஸ் பி பாலசுப்பிரமணியனுக்கு எல் ஆர் ஈஸ்வரிக்கு ஈடு கொடுத்து பாடவே முடியவில்லையாம்.
இதனை பார்த்துக்கொண்டே இருந்த இசையமைப்பாளர் சத்யம் விறு விறுவென வந்து ஒழுங்காக பாடமாட்டியா? என்பது போல எஸ் பி பாலசுப்பிரமணியனை திட்டிவிட்டாராம். திட்டியவுடன் அங்கு வெளியே இருந்த மரத்தடிக்கு கீழ் அமர்ந்து எஸ் பி பாலசுப்பிரமணியம் கதறி அழுதாராம். இதனை பார்த்த தயாரிப்பாளர்கள் பையன் புது பையன் சொல்லி கொடுத்து பாட செய்யுங்கள் என்று கூறினார்களாம்.
அதன்புறகு ஒரு வழியாக எஸ் பி பாலசுப்பிரமணியம் அந்த பாடலை பாடிவிட்டாராம். அப்படி இருந்த எஸ் பி பாலசுப்பிரமணியம் அதன்பிறகு பல பாடல்களை பாடி முன்னணி பாடகராக மாறி அவரை திட்டிய இசையமைப்பாளர் சத்யத்யே தனது வாயால் எஸ் பி பாலசுப்பிரமணியம் என்னுடைய பையன் என்று கூறும் அளவுக்கு எஸ் பி பாலசுப்பிரமணியம் வளர்ந்தாராம். இந்த தகவலை பிரபல நடிகரான
சென்னை : நாளை தமிழக அரசு சட்டப்பேரவையில் மாநில பட்ஜெட் 2025 - 2026-ஐ தாக்கல் செய்ய உள்ளது. முதலமைச்சர்…
டெல்லி : ரோஹித் சர்மா சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் இருந்து இப்போது ஓய்வு பெறவில்லை என திட்டவட்டமாக தெரிவித்த நிலையில்.…
சென்னை : தமிழ்நாடு அரசின் 2025-26 நிதியாண்டுக்கான பட்ஜெட், நிதியமைச்சர் தங்கம் தென்னரசு நாளை (மார்ச் 14, 2025) காலை…
இஸ்லாமாபாத் : நேற்று போலன் மாவட்டத்தில் பலுசிஸ்தான் கிளர்ச்சி அமைப்பான பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் (BLA) சுமார் 500 பயணிகளுடன்…
டெல்லி : தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக சென்னையில் வரும் 22 ஆம் தேதி திமுக சார்பில் ஆலோசனைக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு…
பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு தொடங்கியதிலிருந்து அரசியல் வட்டாரத்தில் ஹாட் டாப்பிக்கான விஷயமாக மாறியிருக்கிறது. ஏனென்றால், இந்த கூட்டத்தொடரில்…