“வெந்து தணிந்தது காடு” படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் சிம்பு “பத்துதல” திரைப்படத்தில் நடித்து வருகிறார் .இந்த திரைப்படத்திற்கான, படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் இந்த படம் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த படத்தை தொடர்ந்து சிம்பு அடுத்ததாக மன்மதன் படத்தின் இரண்டாவது பாகத்தை இயக்கி நடிக்கவுள்ளதாக கடந்த சில நாட்களாகவே தகவல்கள் பரவி வந்தது. ஆனால், இன்னும் அது பற்றி எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.
இந்நிலையில், பத்து தல படத்திற்கு பிறகு நடிகர் சிம்பு அடுத்ததாக எந்த இயக்குனர் இயக்கும் படத்தில் நடிக்க போகிறார் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு மத்தியில் அதிகரித்து வரும் நிலையில், தற்போது ஒரு புதிய தகவல் கிடைத்துள்ளது. அது என்னவென்றால், நடிகர் சிம்பு அடுத்ததாக சூப்பர் ஹீரோ கதாபாத்திரத்தில் உருவாகும் ஒரு படத்தில் நடிக்கவுள்ளாராம்.
இதையும் படியுங்களேன்- டாப் ஹீரோக்களுக்கே சிம்ம சொப்பனமாக மாறிய தமிழ் சினிமா வில்லிகள்… மிரட்டல் நாயகிகளின் டாப் 10 லிஸ்ட் .!
அந்த திரைப்படத்தை பல வெற்றிப்படங்களை கொடுத்த இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கவுள்ளாராம். தற்போது இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் அந்த படத்திற்கான வேளைகளில் தான் பிசியாக இருந்து வருகிறாராம். எனவே அவர் சிம்புவை வைத்து இயக்கவுள்ள இந்த படத்தின் மூலம் தரமான கம்பேக் கொடுப்பார் என தெரிகிறது.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…