சினிமா

இறைவன் கொடுத்த படுதோல்வி! கடும் வருத்தத்தில் ஜெயம் ரவி எடுத்த அதிரடி முடிவு?

Published by
பால முருகன்

ஜெயம் ரவி தனியாக ஹீரோவாக நடித்த படங்கள் எல்லாம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்து வருகிறது. பொன்னியின் செல்வன் 2 பாகங்கள் அவருக்கு பெரிய வெற்றியை கொடுத்தாலும் கூட அவர் தனி ஹீரோவாக அந்த படத்தில் நடிக்கவில்லை பல பிரபலங்கள் நடித்திருந்தார்கள். அவர் தனியாக ஒரு திரைப்படத்தில் ஹீரோவாக நடித்து மிகப்பெரிய வெற்றியை பெற்ற திரைப்படம் என்றால் கோமாளி படம் தான்.

இந்த திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக அவர் நடித்த பூமி, அகிலன் உள்ளிட்ட படங்கள் எல்லாம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது என்றே கூறலாம். இந்த திரைப்படங்களை தொடர்ந்து நடிகர் ஜெயம் ரவி இறைவன் திரைப்படத்தில் நடித்து வந்தார். இந்த திரைப்படத்தின் கதையை இயக்குனர் கூறும் போதே ஜெயம் ரவிக்கு பெரிய அளவில் நம்பிக்கை ஏற்பட்டதாம்.

எனவே, அதன் காரணமாக தான் அவர் இந்த திரைப்படத்திலும் நடிக்கவும் கமிட் ஆனாராம். கண்டிப்பாக இந்த திரைப்படம் வெற்றிபெறும் என ஜெயம் ரவி எதிர்பார்ப்புடன் இருந்த நிலையில், படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்துள்ளது. படத்திற்கான ட்ரைலர் எல்லாம் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று படத்தின் மீது இருந்த எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது.

ஆனால், படம் மக்களுக்கு பெரிய அளவில் திருப்தி கொடுக்காத காரணத்தால் படம் வசூல் ரீதியாகவும் சரி, விமர்சன ரீதியாகவும் சரி மிகப்பெரிய தோல்வியை சந்தித்துள்ளது. இதனை தொடர்ந்து ஜெயம் ரவி மிகவும் வருத்தத்தில் இருக்கிறாராம். இப்படியான ஒரு சமயத்தில் தான் அவர் அதிரடியான முடிவு ஒன்றை எடுத்துள்ளாராம். அது என்னவென்றால், ஜெயம் ரவியை வைத்து அடங்கமறு  திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் கார்த்திக் தங்கவேல் ஜெயம் ரவியிடம் ஒரு கதை கூறியுள்ளாராம்.

அந்த கதை மிகவும் அருமையாக இருந்ததாம். ஆனால், பட்ஜெட் மிகவும் பெரிதாக வரும் என்பதால் ஜெயம் ரவி யோசித்துக்கொண்டு இருக்கிறாராம். ஏற்கனவே ஜெயம் ரவியை வைத்து அடங்கமறு எனும் பெரிய ஹிட் படத்தை கொடுத்த இயக்குனர் கார்த்திக் தங்கவேல்  மீண்டும் ஜெயம் ரவியை வைத்து படத்தை இயக்கினால் கண்டிப்பா ஹிட் ஆகா வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இறைவன் திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக ஜெயம் ரவி அடுத்ததாக எம்.ராஜேஷ் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதைப்போல சைரன் எனும் திரைப்படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பால முருகன்

Recent Posts

தவெக பூத் கமிட்டி கருத்தரங்கில் சிறிய தீ விபத்து? “ஒதுங்கி நில்லுங்கள்!” விஜய் அட்வைஸ்!

கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார்…

9 minutes ago

தவெக பூத் கமிட்டி கருத்தரங்கு.., என்ன பேசப்போகிறார் விஜய்?

கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் தேர்தல் வாக்குசாவடி முகவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற உள்ளது.…

53 minutes ago

கட்டாய கடன் வசூல்., 3 ஆண்டுகள் சிறை! புதிய சட்ட மசோதா விவரங்கள் இதோ…

சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…

3 hours ago

காஷ்மீர் தாக்குதல் : “விசாரணைக்கு நாங்கள் தயார்!” பாகிஸ்தான் திடீர் அறிவிப்பு!

இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம்தாக்குதலில் 26 இந்தியர்கள் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு TRF எனும் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்று இருந்தது.…

4 hours ago

சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்து! 3 பேர் உயிரிழப்பு!

விருதுநகர் : பட்டாசு ஆலையில் தீ விபத்து சம்பவங்கள் அவ்வப்போது நடைபெறுவது தொடர் கதையாகி வருகின்றன. இன்றும் சிவகாசி அருகே…

4 hours ago

பாகிஸ்தான் அதிகாரியின் ‘கழுத்தறுப்பு’ சைகையால் வெடித்த சர்ச்சை! வைரலாகும் வீடியோ…

லண்டன் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதியன்று காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர்…

5 hours ago