சினிமா

இறைவன் கொடுத்த படுதோல்வி! கடும் வருத்தத்தில் ஜெயம் ரவி எடுத்த அதிரடி முடிவு?

Published by
பால முருகன்

ஜெயம் ரவி தனியாக ஹீரோவாக நடித்த படங்கள் எல்லாம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்து வருகிறது. பொன்னியின் செல்வன் 2 பாகங்கள் அவருக்கு பெரிய வெற்றியை கொடுத்தாலும் கூட அவர் தனி ஹீரோவாக அந்த படத்தில் நடிக்கவில்லை பல பிரபலங்கள் நடித்திருந்தார்கள். அவர் தனியாக ஒரு திரைப்படத்தில் ஹீரோவாக நடித்து மிகப்பெரிய வெற்றியை பெற்ற திரைப்படம் என்றால் கோமாளி படம் தான்.

இந்த திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக அவர் நடித்த பூமி, அகிலன் உள்ளிட்ட படங்கள் எல்லாம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது என்றே கூறலாம். இந்த திரைப்படங்களை தொடர்ந்து நடிகர் ஜெயம் ரவி இறைவன் திரைப்படத்தில் நடித்து வந்தார். இந்த திரைப்படத்தின் கதையை இயக்குனர் கூறும் போதே ஜெயம் ரவிக்கு பெரிய அளவில் நம்பிக்கை ஏற்பட்டதாம்.

எனவே, அதன் காரணமாக தான் அவர் இந்த திரைப்படத்திலும் நடிக்கவும் கமிட் ஆனாராம். கண்டிப்பாக இந்த திரைப்படம் வெற்றிபெறும் என ஜெயம் ரவி எதிர்பார்ப்புடன் இருந்த நிலையில், படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்துள்ளது. படத்திற்கான ட்ரைலர் எல்லாம் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று படத்தின் மீது இருந்த எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது.

ஆனால், படம் மக்களுக்கு பெரிய அளவில் திருப்தி கொடுக்காத காரணத்தால் படம் வசூல் ரீதியாகவும் சரி, விமர்சன ரீதியாகவும் சரி மிகப்பெரிய தோல்வியை சந்தித்துள்ளது. இதனை தொடர்ந்து ஜெயம் ரவி மிகவும் வருத்தத்தில் இருக்கிறாராம். இப்படியான ஒரு சமயத்தில் தான் அவர் அதிரடியான முடிவு ஒன்றை எடுத்துள்ளாராம். அது என்னவென்றால், ஜெயம் ரவியை வைத்து அடங்கமறு  திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் கார்த்திக் தங்கவேல் ஜெயம் ரவியிடம் ஒரு கதை கூறியுள்ளாராம்.

அந்த கதை மிகவும் அருமையாக இருந்ததாம். ஆனால், பட்ஜெட் மிகவும் பெரிதாக வரும் என்பதால் ஜெயம் ரவி யோசித்துக்கொண்டு இருக்கிறாராம். ஏற்கனவே ஜெயம் ரவியை வைத்து அடங்கமறு எனும் பெரிய ஹிட் படத்தை கொடுத்த இயக்குனர் கார்த்திக் தங்கவேல்  மீண்டும் ஜெயம் ரவியை வைத்து படத்தை இயக்கினால் கண்டிப்பா ஹிட் ஆகா வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இறைவன் திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக ஜெயம் ரவி அடுத்ததாக எம்.ராஜேஷ் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதைப்போல சைரன் எனும் திரைப்படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பால முருகன்

Recent Posts

அதிமுக – தேமுதிக கூட்டணியில் விரிசல்? சில மணி நேரத்தில் காணாமல் போன.. விஜயகாந்த் எக்ஸ் தள பதிவு!

சென்னை : தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட்டு கொடுப்பதாக ஒப்பந்தம் செய்யவில்லை என இபிஎஸ் பேசியுள்ளது தேமுதிகவை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. கடந்த…

7 minutes ago

14.8 கிலோ தங்கம் கடத்தலில் ஈடுபட்ட கன்னட நடிகை ரன்யா ராவ் கைது!.

பெங்களூரு : துபாயிலிருந்து தங்கம் கடத்தியதாக நடிகை ரான்யா ராவ் கைது செய்யபட்டார். கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியொருவரின் நெருங்கிய உறவினரான…

45 minutes ago

INDvsAUS : கடைசி நேரத்தில் தொடர்ச்சி விக்கெட்..திணறிய ஆஸ்..இந்தியாவுக்கு வைத்த இலக்கு!

துபாய் : 2025 -ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதி போட்டி இன்று  துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று…

1 hour ago

ஹெட் விக்கெட்டை எடுக்க முடியுமா? சவால் விட்ட ஸ்மித்…பதிலடி கொடுத்த இந்தியா!

துபாய் : இந்தியா என்றாலே எனக்கு பிடிக்கும் என்பது போல ஐசிசி போட்டிகளில் ஆஸ்ரேலியா அணியின் தொடக்க ஆட்டக்காரர் டிராவிஸ்…

3 hours ago

குட் பேட் அக்லி பார்த்து ஓடியதா இட்லி கடை? ரிலீஸ் தேதிக்கு வந்த திடீர் சிக்கல்!

சென்னை : வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி அஜித்தின் குட் பேட் அக்லி, மற்றும் தனுஷின் இட்லி கடை ஆகிய படங்கள்…

4 hours ago

ஆனந்த் அம்பானியின் வந்தாரா: வனவிலங்கு மறுவாழ்வு மையத்தை திறந்து வைத்து சிங்கக்குட்டிக்கு பாலூட்டிய மோடி.!

குஜராத் : ஜாம்நகர் மாவட்டத்தில் உள்ள ஆனந்த் அம்பானியின் விலங்கு மீட்பு, பாதுகாப்பு மற்றும் மறுவாழ்வு மையமான வந்தாராவை இன்று…

4 hours ago