சினிமா

இருக்கைகளை சேதபடுத்தியதன் எதிரொலி? ரோஹிணி திரையரங்கில் ‘லியோ’ படம் திரையிடபடாது!

Published by
பால முருகன்

சென்னையில் அமைந்துள்ள பிரபலமான ரோஹிணி திரையரங்கில் விஜய் நடித்துள்ள ‘லியோ’ திரையிடப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

ரோஹிணி தியேட்டர் 

ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை அனைவரும் ஒரு படம் வெளியானால் அந்த படத்தை பார்க்க செல்லும் திரையரங்கு ரோஹிணி தான். ஏனென்றால், ரசிகர்கள் கொண்டாட்டத்தை பார்க்கவேண்டும் என்றால் இந்த திரையரங்கிற்கு சென்று பார்க்கலாம். அந்த அளவிற்கு ரசிகர்கள் அனைவரும் படம் வெளியாகும் முதல் நாள் முதல் காட்சிக்காக இரவே சென்று கூட்டமாக திரையரங்கு வாசலிலில் நடனம் ஆடி ஸ்பீக்கர்கள் வைத்து கொண்டாடுவார்கள்.

லியோ திரையிடப்படாது 

பெரிய நடிகர்களின் படங்களை வாங்கி ஒளிபரப்பும் ரோஹிணி தியேட்டர் இந்த முறை விஜய் நடிப்பில் உருவாகியுள்ள “லியோ” படத்தை திரையிடமாட்டோம் என அறிவித்துள்ளது. விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் நாளை (அக்டோபர் 19) மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகவுள்ளது.

இதனையடுத்து, படத்தை ரோஹிணி  திரையரங்கில் கொண்டாடி தீர்க்கலாம் என ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், தற்போது “லியோ படம் இங்கு திரையிடப்படாது” என்ற பதாகையை திரையரங்கு வாசலில் வைத்து அறிவித்துள்ளது. இதனால் ரசிகர்கள் சற்று வருத்தத்தில் இருக்கிறார்கள்.

காரணம்? 

மேலும், திடிரென கடைசி நேரத்தில் ரோஹிணி  திரையரங்கில் ‘லியோ’ படம் வெளியாகாது  என அறிவிக்க காரணம் என்னவென்றால் லியோ படத்தின் டிரைலர் கடந்த 5-ஆம் தேதி வெளியாகும் போது படத்தின் ட்ரைலரை பார்க்க வந்த ரசிகர்கள் திரையரங்கில் அமைந்திருந்த இருக்கைகள் அனைத்தையும் உடைத்து சேத படுத்தினார்கள்.

இந்த சம்பவம் குறித்து பலரும் தங்களுடைய கண்டனங்களை தெரிவித்த நிலையில், விஜய் திரையரங்கு உரிமையாளரை நேரில் அழைத்து பேசினார். இருப்பினும், இருக்கைகளை அடித்து நொறுக்கி ரசிகர்கள் இப்படியான சம்பவத்தில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. எனவே, படம் வெளியானால் அதனை பார்க்க வருபவர்களும் இப்படி செய்யலாம் என்பதால் ரோஹிணி  திரையரங்கு லியோ படத்தை வெளியிடாமல் இருக்கலாம் என கூறப்படுகிறது.

இனிமே ட்ரைலர் கிடையாது 

மேலும், திரையரங்குகளில் ட்ரெய்லர்கள் ரிலீஸ் செய்வதன் காரணமாக சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படுவதோடு, திரையரங்கிலும் பாதிப்பு ஏற்படுகிறது என்ற காரணத்தால் இனி திரையரங்குகளில் ட்ரெய்லர்கள் வெளியிடுவது இல்லை என திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம்  அறிவித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Published by
பால முருகன்

Recent Posts

கம்பீர் செய்வது நியாயமில்லை., கே.எல்.ராகுலுக்காக சண்டைக்கு செல்லும் முன்னாள் நட்சத்திர வீரர்!

அகமதாபாத் : இந்திய கிரிக்கெட் அணியும், இங்கிலாந்து கிரிக்கெட் அணியும் டி20 தொடர் மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாடி வருகிறது.…

1 hour ago

AI உச்சி மாநாட்டுக்கு முன் பிரமாண்ட விருந்து…மாக்ரோன், ஜேடி வான்ஸை சந்தித்த பிரதமர் மோடி !

பாரிஸ் : பிரதமர் நரேந்திர மோடி தற்போது மூன்று நாள் பயணமாக பாரிஸிற்கு சென்றுள்ள நிலையில், பாரிஸ் வந்தடைந்த பிரதமர் நரேந்திர…

1 hour ago

கேமிங் பிரியர்களே உங்களுக்கு தான்! Realme P3 Pro -வின் சிறப்பு அம்சங்கள்!

டெல்லி : கேமிங் விளையாடுவதில் அதிகம் ஆர்வம் காட்டுபவர்கள் என்ன போன் வாங்கலாம் என யோசிப்பது உண்டு. அதிலும், தொடர்ச்சியாக ரியல்மீ…

2 hours ago

காங்கிரஸ் கூட்டணியே வேண்டாம்., நாங்கள் தனித்து நிற்கிறோம்! மம்தா அதிரடி முடிவு!

கொல்கத்தா :  தமிழகம் போலவே மேற்கு வங்கத்திலும் அடுத்த ஆண்டு (2026) இடையில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.  இதற்கான…

3 hours ago

கருடனை விட கவிழ்ந்த விடாமுயற்சி! அஜித் படத்திற்கு இந்த நிலைமையா?

சென்னை : விடாமுயற்சி படம் அஜித் ரசிகர்கள் மற்றும் இன்னும் பலருக்கு பிடித்திருந்தாலும் கூட சிலருக்கு பிடிக்கவில்லை என்பதால் கலவையான விமர்சனங்களை…

3 hours ago

INDvENG : டேஞ்சரில் சச்சின் சாதனை! முறியடிப்பாரா ஹிட்மேன் ரோஹித் சர்மா?

அகமதாபாத் : இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரை 2-0 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றிய நிலையில். அடுத்ததாக…

4 hours ago