Desingh Periyasamy - STR [File Image]
பத்து தல திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து, நடிகர் சிம்பு இயக்குனர் தேசிங் பெரியசாமியுடன் கைகோர்த்து தனது 48வது திரைப்படத்தில் நடிக்க போகிறார். தற்காலிகமாக ‘STR48’ என்று இந்த படத்திற்கு தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தை கமல்ஹாசன் தன்னுடைய ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிக்கிறார்.
இந்த படத்திற்கான படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படவிருக்கும் நிலையில், இந்த படம் பற்றிய சுவாரஸ்யமான தகவலை இயக்குனர் தேசிங் பெரியசாமி, பிரபல ஊடகமான சினிமா விகடனுக்கு பகிர்ந்துள்ளார். இது தொடர்பாக பேசிய தேசிங் பெரியசாமி, STR ஒரு பேட்டியில் ”நா காட்டு பசியில் இருக்கிறேன்’ என்று சொல்லிருந்தார்.
அதுபோல், ‘STR48’ படம் நிச்சயம் சிம்புவுக்கு ஒரு விருந்தாக இருக்கப்போகிறது என நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது பக்கா லோக்கல் பீரியட் பிலிமாக இருக்கும், ஒரு ஹீரோ எப்படி ஒரு படத்தில் அது பண்ணிரலாம் இத பண்ணிரலாம் என்று நினைப்பார்களோ அதெல்லாம் இந்த படத்தில் இருக்கிறது. அதாவது, இந்த படத்தில் டான்ஸ், ஸ்டண்ட் என சிம்பு எல்லாத்தையுமே பண்ணுவார். தாயரிப்பாளர் தில் ராஜு சொன்ன டயலாக் போல, இந்த படத்தில் எண்ணலாம் வேணுமோ அதெல்லாம் இருக்கு.
ரஜினிக்கு சொன்ன அந்த கதையில் தான் சிம்பு நடிக்கிறார்! உண்மையை உடைத்த தேசிங் பெரியசாமி!
கதையில் நிறைய கேரக்டர்கள் இருப்பதால், நிச்சயம் புதுசா இருக்கும். படத்தை ராஜ் கமல் பிலிம்ஸ் தயாரிப்பதால் கதையை கமல் சார்கிட்ட சொன்னேன். அவருக்கும் கதை ரொம்ப பிடிச்சிருந்தது. அவர் கதையை கேட்டதும் “தம்பியோட ஒட்டு மொத்த திறமைக்கும் தீனியாக இருக்கபோகிறது” என்று கமல் சார் சொன்னதாக இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது பேட்டியில் பகிர்ந்துகொண்டார்.
சிம்புவின் நடிப்பில் மிகப்பெரிய படமாக உருவாகவிருக்கும் இப்படத்தில் அவர் இரட்டை வேடத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. இதனால், தனது கதாபாத்திரத்திற்காக தாய்லாந்தில் தற்காப்புக் கலைகளைக் கற்றுக்கொண்டார், மேலும், சில தீவிர உடற்பயிற்சிகளுக்காக சமீபத்தில் லண்டனுக்குச் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : திமுக பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் அண்மையில் தனது தொகுதியான காட்பாடியில் நடைபெற்ற கட்சி நிகழ்வில் பேசுகையில், மாற்றுத்திறனாளிகள்…
சென்னை : திமுக அமைச்சர் பொன்முடி அண்மையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பேசுகையில், உடலுறவு குறித்து மறைமுகமாக இரு சமூகத்தை…
சென்னை : இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்திருந்திருக்கும் உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழிசை சௌந்தரராஜன் வீட்டிற்கு நேரில் சென்று…
சென்னை : அண்மையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட அமைச்சர் பொன்முடி, விலைமாது பெண் பற்றி கதை கூறினார்.…
பெங்களூரு : நேற்றைய ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் , டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் விளையாடின. இதில்…
சென்னை : தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் பொன்முடி சமீபத்தில் ஒரு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு, அவர் பேசிய பேச்சுக்கள்…