சென்னை : கோட் படத்திற்கு 150 கோடி தயாரிப்பு நிறுவனம் கேட்டதால் பிரபல ஓடிடி நிறுவனம் படத்தை வாங்க மறுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கோலிவுட் திரையுலகில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் விஜய் நடித்து வரும் கோட் படம் உருவாகி கொண்டு இருக்கிறது. இந்த திரைப்படத்தினை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பும் போஸ்ட் ப்ரொடக்சன் வேலைகளும் மும்மரமாக நடைபெற்று வருகிறது. படம் வரும் செப்டம்பர் மாதம் 5-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
படம் வெளியாக இன்னும் சில மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், படத்திற்கான விற்பனை வியாபாரங்களும் சூடுபிடிக்க தொடங்கி இருக்கிறது. அந்த வகையில் கோட் படத்தின் திரையரங்கிற்கு பிந்தைய ஓடிடி உரிமையை பிரபல ஓடிடி நிறுவனமான நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் 120 கோடி கொடுத்து வாங்கியதாக முன்னதாக தகவல்கள் வெளியாகி இருந்தது.
ஆனால், இந்த படத்தை ஓடிடியில் விற்பனை செய்யப்படுவதற்கு முன்னதாக நெட்ப்ளிக்ஸ் நிறுவனத்திடம் தயாரிப்பு நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தும்போது 150 கோடி வேண்டும் என கேட்டார்களாம். அதற்கு நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் 150 கோடி எல்லாம் கொடுக்கவே முடியாது ரொம்பவே அதிகமான தொகையை கேட்கிறீர்கள் என்பது போல கூறினார்களாம்.
இதனால் கோட் படத்தின் தயாரிப்பு நிறுவனம் வேறு எந்த ஓடிடி நிறுவனமாவது வாங்கிக்கிறதா என பல நிறுவனங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியாதாம். ஆனால், எந்த நிறுவனமும் கோட் படத்தை வாங்க முன்வரவில்லையாம். இறுதியாக நெட்ப்ளிக்ஸ் நிறுவனத்திடம் தயாரிப்பு நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தியதாம். அப்போது தான் நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் 150 கோடி எல்லாம் முடியாது 125 கோடி என்றால் ஓகே படத்தை வாங்கி கொள்கிறோம் என்று கூறியதாம். எனவே, படத்தை நெட்ப்ளிக்ஸ் ஓடிடி உரிமையை வாங்கியுள்ளதாகவும் யூடியூப் சேனலான வலைப்பேச்சு தெரிவித்துள்ளது.
சென்னை : சூர்யா ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் தனியாக ஒரு படத்தில் நடிக்க எந்த அளவுக்கு எதிர்பார்ப்பு இருக்கிறதோ அதே அளவுக்கு அவர்…
மேற்கு வங்கம் : ஸ்டார்லைனர் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி மையத்திற்கு ஆய்வு பணிகளுக்காக இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க விண்வெளி…
பஞ்சாப் : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் வரும் மார்ச் 22-ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ள நிலையில், போட்டியில் விளையாடும் அணிகள்…
டெல்லி : இந்த வருட ஐபிஎல் (IPL 2025) திருவிழா வரும் மார்ச் 22ஆம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன்…
சென்னை : டாஸ்மாக் டெண்டர்களில் சுமார் ரூ.1000 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறப்பட்ட நிலையில் அதற்கு பொறுப்பேற்று அமைச்சர் செந்தில் பாலாஜி…
ஈரோடு : சேலம் மாவட்ட சரித்திர பதிவேடு குற்றவாளி ரவுடி ஜான் எனும் சாணக்யாவை மர்ம கும்பல் ஒன்று இன்று…