இயக்குனர் முத்தையா தற்போது கார்த்தியை வைத்து விருமன் என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த படம் வருகின்ற ஜூன் அல்லது ஜூலை மாதம் திரையரங்குககளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த படத்தை தொடர்ந்து முத்தையா அடுத்ததாக ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளாராம். இப்படத்தை நடிகர் கமல்ஹாசன் தயாரிக்கவுள்ளார். இப்படத்தில் படத்தில் ஹீரோவாக நடிக்க நடிகர் ஆர்யாவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளதாம். ஆர்யா இந்த படத்தின் கதையை கேட்க அவருக்கும் பிடித்துவிட்டதாம்.
இவரது நடிப்பில் கடைசியாக ஓடிடியில் வெளியான சார்பட்டா பரம்பரை ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று ஆர்யாவின் மார்க்கெட்டை உயர்த்தியது. இதனால் முத்தையா படத்தில் நடிக்க அதிகமாக சம்பளம் கேட்டுள்ளாராம் ஆர்யா.
ஆர்யா கேட்ட சம்பளத்தை கமல்ஹாசன் கொடுக்க ஒப்புக்கொண்டுவிட்டதாகவும், படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் சினிமா வட்டாரத்தில் கிசு கிசுக்கப்படுகிறது.
ஆர்யா தற்போது டெடி திரைப்படத்தின் இயக்குனரான சக்தி சௌந்தர் ராஜன் இயக்கத்தில் கேப்டன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்த பிறகு முத்தையா இயக்கும் படத்தில் ஆர்யா நடிப்பார் என கூறப்படுகிறது.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…