leo Kerala [File Image]
விஜய்யின் ‘லியோ’ திரைப்படம் உலக பாக்ஸ் ஆபிஸில் புதிய சாதனையைப் படைத்துள்ளது. 19ம் தேதி வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப்பெற்று, 5 நாட்களிலேயே ரூ.450 கோடி வசூல் செய்து அசத்தியுள்ளது.
ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த திரைப்படம் நல்ல விமர்சனத்தை பெற்று வசூல் ரீதியாக பல சாதனைகளை படைத்தது வருகிறது. குறிப்பாக, இந்த திரைப்படம் சொந்த நாடுகளை தவிர்த்து மற்ற நாடுகளில், இதற்கு முன்னதாக வசூல் சாதனை செய்திருக்கும் படங்களின் வசூலை முறியடித்து உலக பாக்ஸ் ஆபிஸையே ஒரு கலக்கு கலக்கியிருக்கிறது.
லியோ வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும் ரூ.148 கோடி வசூல் செய்து முதல் நாளில் அதிகம் வசூல் செய்த தமிழ் திரைப்படம் என்ற சாதனையை படைத்திருந்தது. உலகம் முழுவதும் இப்படம் ரூ.450 கோடி வசூலை கடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், திங்கள்கிழமையான நேற்று (அக் 23) தசரா விடுமுறை என்பதால் கூடுதல் வசூல் கிடைத்திருக்கும் என்பதால், ஐந்தாவது நாளான நேற்று கிட்டத்தட்ட ரூ 50 கோடி வசூலித்ததாக கூறப்படுகிறது. நான்கு நாட்களில் ரூ.400 கோடியை கடந்த நிலையில், 5 நாட்களில் ரூ.450 கோடியை எட்டியிருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.
அந்த வகையில், இந்த வசூலில் தமிழ்நாட்டில் மட்டும் இப்படம் ரூ.100 கோடி வசூல் செய்திருக்கும் என்றும், இந்திய அளவில் ரூ.200 கோடியை தாண்டியிருக்கும் என கூறப்படுகிறது. மேலும், தமிழ்நாட்டை போலவே, கேரளாவில் ரூ.40 கோடி வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.
ஆனால், படக்குழு இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை இன்னும் வெளியிடவில்லை. முதல் வசூலை மட்டும் வெளியிட்டது. இதனால், வரும் நாட்களில் படக்குழு அதனை தெரிவிக்கும் வரை காத்திருக்க வேண்டும். இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருவதன் காரணமாக படத்தின் வசூல் இன்னுமே அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
லியோ
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள இந்த படத்தை 7 ஸ்க்ரீன் நிறுவனம் தயாரித்துள்ளது. அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தில் த்ரிஷா, கெளதம் மேனன், அர்ஜுன், மிஷ்கின், சாண்டி உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள்.
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
டெல்லி : நேற்று முன்தினம் (ஏப்ரல் 22) காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக…
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையான தொடர் 'தடை' நடவடிக்கைகள் இரு நாட்டு…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் பகுதி பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில்,…