சினிமா

கதை சொல்ல போன பிரபலம்! நடிகராக்கி பெயர் வாங்கிக் கொடுத்த விஜயகாந்த்!

Published by
பால முருகன்

நடிகர் விஜயகாந்த் பண உதவிகள் மற்றும் பலருக்கும் சாப்பாடு கொடுத்து உதவி செய்தது மட்டுமின்றி பல நடிகர்களுக்கு தன்னுடைய படங்களை விட்டும் தனக்கு வரும் பட வாய்ப்பை மறுத்துவிட்டு இந்த ஹீரோக்கு சரியாக இருக்கும் அவரிடம் சொல்லுங்கள் என கூறி அந்த நடிகருக்கு வாய்ப்பு கொடுத்துவிடுவார். இதனை பல நடிகர்களும் தெரிவித்தது உண்டு.

குறிப்பாக ஒரு பேட்டியில் கூட நடிகர் சரத்குமார் பேட்டி ஒன்றில் :”பெரிய இயக்குனர் விஜயகாந்திற்கு கதை கூறியதாகவும் அந்த கதையை கேட்டு மிகவும் சந்தோசம் அடைந்துவிட்டு இந்த கதையை சரத்குமார் கிட்ட கூறுங்கள் என அந்த இயக்குனரிடம் கூறிவிட்டு தன்னிடம் இதனை பற்றி விஜயகாந்த் கூறியதாக”சரத்குமார்  தெரிவித்திருந்தார்.

அற்புதமாக அட்வைஸ் செய்த விஜயகாந்த்! துளி கூட காது கொடுத்து கேட்காத கௌசல்யா!

இந்த நிலையில், அப்படித்தான் ஒரு கதை வைத்து விட்டு விஜயகாந்திடம் கூற சென்றபோது அவரை நடிகராக ஒரு படத்தில் நடிக்க வைத்து அவருக்கு பெயரையும் அடுத்ததடுத்த படங்களில் நடிக்கும் வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்துள்ளார். அந்த நடிகர் வேறு யாருமில்லை பல படங்களில் காமெடி கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமான லிவிங்ஸ்டன் தான்.

இதுவரை லிவிங்ஸ்டன் பல படங்களில் காமெடி கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். அதில் பெரிய அளவில் ஒரு முக்கியமான கதாபாத்திரமாகவும் மறக்கும்படியாத வகையில் இருக்கும் கதாபாத்திரம் எதுவென்றால், அவர் விஜயகாந்துடன் ” பூந்தோட்ட காவல்காரன்” படத்தில் ராம்குமார் எனும் கதாத்திரத்தில் நடித்தது தான். இந்த கதாபாத்திரம் அந்த சமயம் பெரிய அளவில் பேசப்பட்டது என்றே சொல்லவேண்டும்.

பணம் வேஸ்ட் ஆயிடும் நான் மரத்து மேலயே இருக்கிறேன்! தயாரிப்பாளரை நெகிழ வைத்த விஜயகாந்த்!

அது மட்டுமின்றி. இந்த திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தான்  இவருக்கு பெரிய அளவில் பெயர் கிடைத்தது படங்களில் நடிக்கும் வாய்ப்பும் தொடர்ச்சியாக குவிய தொடங்கியது என்றே சொல்லலாம். ஆனால், முதலில் இந்த படத்தில் நடிக்கபோறோம் என்பது இவருக்கு தெரியவே தெரியாதாம். விஜயகாந்திடம் ஒரு படத்தின் கதையை கூறதான் சென்றாராம்.

விஜயகாந்த் நாளைக்கு கதை சொல்ல வா என்று ” பூந்தோட்ட காவல்காரன்”  படத்தின் படப்பிடிப்பு நடக்கும் இடத்தை காமித்து கூறிவிட்டாராம். பிறகு அடுத்த நாள் லிவிங்ஸ்டன்  கதையை கூற சென்றாராம் அப்போது நேற்று இந்த படத்தில் நீ ஒரு கதாபாத்திரத்திற்கு சரியாக இருப்பாய் என்று கூறினேன் எனவே அதனால் உன்னை இன்று நடக்கும் படப்பிடிப்பிற்கு வரச்சொன்னேன் என்று விஜயகாந்த்  கூறியுள்ளார்.

கமல் சாரோட நட்பை நானே கெடுத்துட்டேன்! வருத்தத்துடன் மன்னிப்பு கேட்ட நடிகர் லிவிங்ஸ்டன்!

அதற்கு,  லிவிங்ஸ்டன்  என்னுடைய கதை அப்போ பிடிக்கவில்லையா சார் என்று கேட்டுள்ளார். பின்  விஜயகாந்த்  கதை முதல் பாதி நன்றாக இருக்கிறது ஆனால், நான் உன்னை இந்த படத்தில் நடிக்க வைக்கத்தான் இன்று வரச்சொன்னேன் என்று கூறியுள்ளார். பிறகு விஜயகாந்த்  கூறிய காரணத்தால் இந்த ” பூந்தோட்ட காவல்காரன்” படத்தில் நடித்துக்கொடுத்தாராம். இந்த தகவலை லிவிங்ஸ்டன்  பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

Published by
பால முருகன்

Recent Posts

IND vs NZ : ‘ஒரு கேப்டனாக வேதனை அடைந்தேன்’.. ரோஹித் சர்மா பேச்சு!

பெங்களூர் : இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாளானது மழையின் காரணமாக நடைபெறாமல்…

44 mins ago

‘நவம்பர்… தமிழகத்திற்கு அதிக மழை கொண்டு வரும்’ – விளக்கம் கொடுத்த வெதர்மேன்!

சென்னை : கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் கனமழை பெய்து வந்த நிலையில் தற்போது அடுத்ததாக வரும் அக்-20 ம்…

50 mins ago

ஹமாஸ் தலைவர் உயிரிழப்பு : “மீதம் இருப்பவர்களையும் அழிப்போம்” – நெதென்யாகு சபதம்!

ஜெருசலேம் : காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும், இஸ்ரேல் ராணுவத்திற்கும் இடையே கடந்த ஒரு வருட காலமாக போர்…

1 hour ago

காலை 10 மணி வரை இந்த 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்!

சென்னை : வங்க கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று கரையைக் கடந்தது. இதனால், தமிழகம் மற்றும்…

2 hours ago

பை பை ஆஸி.! இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது தென்னாப்பிரிக்கா மகளிர் அணி!

துபாய் : நடைபெற்று வரும் மகளிர் உலகக் கோப்பை தொடரில் முதல் அரை இறுதிப் போட்டியானது இன்று நடைபெற்றது. இந்தப்…

11 hours ago

நாளை எந்தெந்த இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு? வானிலை மையம் கொடுத்த அலர்ட்!

சென்னை : மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று…

13 hours ago