சண்டை போட்ட நடிகை! செருப்பை வைத்து தலையில் அடித்துக் கொண்ட பாரதிராஜா!

Published by
பால முருகன்

பாரதி ராஜா : 80,90 காலாட்டத்தில் முன்னணி இயக்குனராக கலக்கி வந்த பாரதி ராஜா பல நடிகைகளை தங்களுடைய படங்களில் நடிக்க வைத்து முன்னணி நடிகையாக உதவி செய்து இருக்கிறார் என்றே சொல்லலாம். அதில் ஒருவர் நடிகை வடிவுக்கரசி. பாரதி ராஜா இயக்கத்தில் வடிவுக்கரசி சிகப்பு ரோஜாக்கள் படத்தில் நடித்ததன் மூலம் தான் அறிமுகம் ஆனார்.

இந்த படத்திற்கு பிறகு தான் தொடர்ச்சியாக படங்களில் நடித்து முன்னணி நடிகையாகவும் ஆனார். ஆனால், ஒரு முறை கிழக்கு சீமையிலே படத்தில் நடித்த சமயத்தில் வடிவுக்கரசிக்கும்  இயக்குனர் பாரதி ராஜாவுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டதாம். இந்த பிரச்சனையின் போது ஒரு கட்டத்தில் ரொம்பவே கடுப்பான பாரதி ராஜா செருப்பை எடுத்து தன்னுடைய தலையிலே அடித்து கொண்டாராம்.

கிழக்கு சீமையிலே படத்தில் நடிக்க வடிவுக்கரசி கமிட் ஆன போது ஒரு முறை படப்பிடிப்புக்கு வரும் படி இயக்குனர் பாரதி ராஜா கூறினாராம். பின் அவரும் ரயில் ஏறி படப்பிடிப்புக்கு சென்றாராம். அன்று வடிவுக்கரசிக்கு பிறந்த நாள் என்பதால் கையிலே இனிப்பு எடுத்துக்கொண்டு படப்பிடிப்பில் இருந்த அனைவர்க்கும் கொடுத்துவிட்டு மகிழ்ச்சியாக இருந்தாராம். பிறகு பாரதி ராஜா வடிவுக்கரசியை அழைத்து நீ நடிக்கும் இந்த கதாபாத்திரம் படத்தில் வேண்டாம் என்று நான் நினைக்கிறேன் என்று கூறினாராம்.

இதனால் ரொம்பவே கடுப்பான நடிகை வடிவுக்கரசி பாரதி ராஜாவுடன் சண்டைபோட தொடங்கினாராம். அந்த சமயம் வடிவுக்கரசிக்கு விஜயகுமார் எதாவது சொல்லி தன்னுடைய கதாபாத்திரத்தில் மஞ்சுளா  நடிக்கிறார் போல என்று தோணுவிட்டதாம். இதனை சொல்லியே வடிவுக்கரசி பாரதிராஜாவிடம் சண்டைபோட்டாராம். பிறகு பாரதி ராஜாவும் சற்று கடுப்பாகி தன்னுடைய செருப்பை கழட்டி தன்னுடைய தலையில் அடித்து கொண்டு இந்த படத்தில் உன்னுடைய கதாபாத்திரத்திற்கு வேறு யாரவைத்து வைத்து நான் எடுத்தால் என்னை செருப்பால அடி என்று கூறி அடித்து கொண்டே இருந்தாராம்.

பிறகு வடிவுக்கரசியிடம் நீ கோப படாமல் ரூமில் போய் இரு நான் இரவு முடிவு செய்துவிட்டு உன்னிடம் பேசுகிறேன் என்று கூறினாராம். அதனை தொடர்ந்து நடிகை வடிவுக்கரசி நீங்கள் என்ன என்னை தேர்வு செய்வது நான் இந்த படத்தில் நடிக்கவே மாட்டேன் என்று கூறிவிட்டு படத்தில் இருந்து விலகி விட்டாராம். இந்த தகவலை நடிகை வடிவுக்கரசியே சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

Published by
பால முருகன்

Recent Posts

காற்று மாசுபாட்டை குறைக்க டெல்லி அரசின் ஐடியா.! வீதி வீதியாய் வரும் வாகனம்…

காற்று மாசுபாட்டை குறைக்க டெல்லி அரசின் ஐடியா.! வீதி வீதியாய் வரும் வாகனம்…

டெல்லி :  தலைநகர் டெல்லியின் மிகப் பெரும் பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது காற்று மாசு. கடந்த சில ஆண்டுகளாக இதனை…

8 mins ago

ஐபிஎல் 2025 : கேப்டன் பொறுப்பிலிருந்து வெளியேறுகிறார் ‘ரிஷப் பண்ட்’? காரணம் இதுதான்!

சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறப் போகும் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விரைவில் நடைபெற இருக்கிறது. இதற்கான தீவிர…

29 mins ago

துலாபார வழிபாடும் அதன் பலன்களும் ..!

சென்னை -துன்பங்களை துரத்தியடிக்கும் துலாபாரம் கொடுக்கும் முறை பற்றி இந்த ஆன்மீக செய்தி குறிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம். துலாபாரம்…

33 mins ago

ஆட்டத்தை ஆரம்பித்த விஜய்.! தவெக தொண்டர்களுக்கு அரசியல் பயிலகம் தொடக்கம்…

சென்னை : சினிமாவில் உச்சநட்சத்திரமாக இருந்து தற்போது அரசியல் களத்தில் இறங்கியுள்ள விஜய், தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை…

47 mins ago

கிடு கிடு உயர்வு! 58,000-த்தை நெருங்கும் தங்கம் விலை!

சென்னை : சென்னையில் ஆபரணத்தங்கம் விலை புதிய உச்சத்தை நாளுக்கு நாள் தொட்டு வருகிறது. அதன்படி, நேற்று சவரனுக்கு ரூ.57…

59 mins ago

பருப்பு விவகாரம்., “பாஜகவின் ஆதாரமற்ற குற்றசாட்டு.!” தமிழக அரசு வெளியிட்ட விளக்க அறிக்கை..,

சென்னை : தமிழக ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு சரிவர கிடைக்கப்பெறவில்லை என்றும், கடந்த 6 மாதங்களாக சரிவர கிடைக்காமல்…

1 hour ago