நடிகர் விஜய் தனது அம்மாவுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரல்.
தளபதி விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தனது புதிய கேங்ஸ்டர் படமான ‘லியோ’ படப்பிடிப்பில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். அவரது நடிப்பில் கடைசியாக இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளிவந்த ‘வாரிசு’ திரைப்படம் வெற்றி பெற்றது. இந்த ஃபேமிலி என்டர்டெய்னர் திரைப்படம் 300 கோடிகளுக்கு மேல் வசூலித்தது.
இப்பொது, நடிகர் விஜய் தனது தாயார் ஷோபா சந்திரசேகருடன் இருக்கும் அழகான புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி தீயாக பரவி வருகிறது. சமீபத்தில், வெளியான வாரிசு திரைப்படத்தின் இசை வெளியீட்டின் போது, அவரது தந்து பெற்றோர்களை கண்டுகொள்ளவில்லை என கருத்துக்கள் எழுந்தது.
ஆனால், இதற்கு விளக்கம் கொடுக்கும் வகையில், விஜய்யின் தாயார் ஷோபா சந்திரசேகர் ஒரு யூட்யூப் நேர்காணல் ஒன்றில் பேசுகையில், இந்த தருணத்தில் அவரது ரசிகர்களை அவர் மகிழ்விப்பது தான் முக்கியம். அங்கே எங்களை கவனிக்க வேண்டும் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை என்று கூறினார்.
இந்நிலையில், விஜய் தனது பெற்றோர் ஷோபா மற்றும் இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் ஆகியோரின் 50-வது திருமண நாளை கொண்டாடியபோது இந்த புகைப்படம் எடுக்கப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.
விஜய்யும், எஸ்.ஏ.சந்திரசேகரும் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் பிரிந்து வாழ்கின்றனர். இருந்தாலும் தனது அம்மா மீது அளவில்லா அன்பை வைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கி விட்டது என்றாலே அந்த நிகழ்ச்சி பற்றிய விஷயங்கள் தினம் தினம் தலைப்பு…
சென்னை : தொலைக்காட்சி நிலையத்தின் "இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா" மற்றும் சென்னைத் தொலைக்காட்சியின் பொன்விழா கொண்டாட்டங்கள் இன்று…
சேலம் : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு விக்கிரவாண்டி பகுதியில் வரும் அக்டோபர் 27-ஆம் தேதி நடைபெற…
சென்னை : வங்க கடலில் இதற்கு முன்னர் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று அதிகாலை கரையைக் கடந்தது.…
தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதைப்போல, மத்தியகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளின்…
வாஷிங்க்டன் : இஸ்ரேலுக்கும், ஹமாஸுக்கும் இடையே கடந்த ஒரு வருடமாகப் போர் நடைபெற்று வருகிறது. இதில், இஸ்ரேல் தொடுத்த தாக்குதலில்…