சினிமா

பத்து கோடி பத்தாது! புது படங்களுக்கு சம்பளத்தை உயர்த்திய நடிகை நயன்தாரா?

Published by
பால முருகன்

நடிகைகளில் அதிகமாக சம்பளம் வாங்கும் நடிகை என்றால் நடிகை நயன்தாரா தான். ஏனென்றால், தென்னிந்திய சினிமாவில் ஒரு படத்தில் நடிக்க 10 கோடி எந்த நடிகையும் சம்பளமாக வாங்கவில்லை ஆனால், நயன்தாரா ஒரு படத்தில் நடிக்க சம்பளமாக 10 கோடி தான் வாங்கி வருகிறாராம். கடைசியாக இவர் ஷாருக்கானுக்கு ஜோடியாக ஜவான் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இந்த திரைப்படம் மிக்பெரிய அளவில் வெற்றி அடைந்து வசூல் ரீதியாக ஹிட் ஆன நிலையில், அடுத்ததாக நடிகை நயன்தாரா மண்ணாங்கட்டி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் . இவர் ஜவான் திரைப்படத்தில் நடித்ததற்காக சம்பளமாக 9 கோடி முதல் 10 கோடி வரை வாங்கியதாக தகவல்கள் பரவியது.

இதனையடுத்து, பாலிவுட்டில் ஷாருக்கானுக்கே ஜோடியாக நடித்துவிட்டாச்சு சம்பளத்தை உயர்த்துவோம் என்று முடிவெடுத்து இருக்கிறாராம்.  அதன்படி, நயன்தாரா தான் இனிமேல் நடிக்கும் படங்களுக்கு சம்பளமாக 12 கோடி வாங்கலாம் என்று திட்டமிட்டு இருக்கிறாராம். தன்னை தேடி வரும் படங்களில் நடிக்க சம்மதம் தெரிவித்துவிட்டு படத்தில் நடிக்க சம்பளமாக 12 கோடி கேட்கிறாராம்.

சம்பளத்தை உயர்த்தியதோடு மட்டுமின்றி தற்போது அவர் நடித்து வரும் ‘மண்ணாங்கட்டி’  படத்தின் படப்பிடிப்பின் போதும் ஒரு சம்பவம் செய்துள்ளாராம்.  அது என்னவென்றால், ‘மண்ணாங்கட்டி’   படம் பழமையான காலத்து கதையை வைத்து எடுக்கப்பட்டு வருகிறதாம். எனவே, படத்தின் படப்பிடிப்பு ஏலக்காய் தோட்டத்தில் எடுக்கலாம் என்று திட்டமிட்டு இருந்தார்களாம்.

அதன் காரணமாக கொடைக்கானல் பகுதியில் உள்ள தாண்டிகுடி என்ற இடத்தில ஒரு ஏலக்காய் தோட்டம் இருக்கிறதாம். அங்கு இந்த படத்தின் படப்பிடிப்பு நடத்தினால் நன்றாக இருக்கும் என்பதால் நயன்தாராவிடம் இதனை பற்றி பேசியிருக்கிறார்களாம். ஆனால், நயன்தாரா பூச்சி எல்லாம் அங்கு இருக்கும் என்ற காரணத்தால் தான் நடிக்க வரவில்லை என்று கூறிவிட்டாராம்.

 இதனால், அதைப்போல ஒரு பிரமாண்ட ஷெட்டை படக்குழு சென்னையில் அமைத்து வருகிறதாம். அதுவும் பல கோடிகள் செலவு செய்து அமைத்து வருகிறதாம். நயன்தாரா அந்த பகுதிக்கு வந்து படப்பிடிப்பில் கலந்து கொண்டால் கோடிகளை செலவு செய்யவேண்டிய அவசியமே இல்லை ஆனால், நயன்தாரா இப்படி செய்துள்ளது தயாரிப்பு நிறுவனத்திற்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

Published by
பால முருகன்

Recent Posts

“சிறந்த நடிகர்களில் ஒருவர் விஜய்”! GOAT படத்தை பாராட்டிய பாடலாசிரியர்!

சென்னை : கோட் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அதுவும் ரிலீஸ் ஆன முதல்…

12 hours ago

“அத்தான் அத்தான்”.. அழகாக வெளியான கார்த்தியின் ‘மெய்யழகன்’ டீசர்.!

சென்னை : இயக்குனர் சி பிரேம் குமார் இயக்கத்தில் கார்த்தி மற்றும் அரவிந்த் சாமி முக்கிய வேடங்களில் நடித்துள்ள "மெய்யழகன்"…

12 hours ago

எனக்கு ஏன் காங்கிரஸ் சீட் கொடுக்கவில்லை.? பஜ்ரங் புனியா விளக்கம்.!

டெல்லி : வரும் அக்டோபர் மாதம் நடைபெற உள்ள ஹரியானா மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் மல்யுத்த…

12 hours ago

“RCB கேப்டன் கே.எல்.ராகுல்”! கோஷமிட்ட ரசிகர்கள்..வைரலாகும் வீடியோ!

சென்னை : நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் லக்னோ அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் பெயர் ட்ரெண்டிங்கில் இருந்தது என்றே சொல்லவேண்டும். ஏனென்றால்,…

12 hours ago

“வயிற்றெரிச்சல் பழனிச்சாமி., உங்களுக்கு அருகதை இல்லை .” ஆர்.எஸ்.பாரதி கடும் கண்டனம்.!

சென்னை :  அசோக் நகர் அரசுப் பள்ளியில் மகாவிஷ்ணு என்பவர், மாற்றுத்திறனாளிகள் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதும், அதனை கண்டித்த…

13 hours ago

நிச்சயம் முடிந்து 5 மாதம்: திருமணத்தை நிறுத்திய மலையாள மேக்கப் கலைஞர்.!

திருவனந்தபுரம் : கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த பிரபல மேக்கப் கலைஞரும், திருநங்கையுமான சீமா வினீத், திருமணத்தில் இருந்து விலகுவதாக…

13 hours ago