Categories: சினிமா

அந்த மாதிரி கேள்வி கேட்ட ரசிகர்! அதிர்ச்சியில் ஆழ்ந்த தன்யா ரவிச்சந்திரன்!

Published by
murugan

நடிகை தன்யா ரவிச்சந்திரன் பேட்டி ஒன்றில் கலந்துகொண்டபோது ரசிகர் ஒருவர் தன்னிடம் கேட்ட வித்தியாசமான கேள்வி பற்றிய சம்பவத்தை நினைவுகூர்ந்துள்ளார்.

தமிழ் சினிமாவில் பல்லே வெள்ளையத்தேவா திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகம் ஆனவர் நடிகை தன்யா ரவிச்சந்திரன். இந்த திரைப்படத்தை தொடர்ந்து கருப்பன், நெஞ்சுக்கு நீதி, மாயோன் உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் மக்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமானார். தமிழில் கிடைத்த வரவேற்பு காரணமாக தெலுங்கிலும் இவருக்கு படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் வந்துகொண்டு இருக்கிறது.

குறிப்பாக காட் ஃபாதர் படத்தில் கூட நடிகை   தன்யா ரவிச்சந்திரன் நடித்து இருந்தார். இந்த திரைப்படத்தை தொடர்ந்து ராசாவதி என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் மே 10 திரையரங்குகளில் வெளியாகி பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகளும் மும்மரமாக நடைபெற்று கொண்டு இருக்கிறது. அந்த வகையில், படத்தில் நடித்த பிரபலங்கள் எல்லாம் ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்து வருகிறார்கள்,

அப்படி தான் நடிகை தன்யா ரவிச்சந்திரன் படத்தின் ப்ரோமோஷனுக்காக பேட்டி ஒன்றில் கலந்துகொண்டபோது ரசிகர் ஒருவர் அவரிடம் கேட்ட கேள்விக்கு மிகவும் அதிர்ச்சியான சம்பவத்தை பகிர்ந்து கொண்டார். பேட்டியில் பேசிய நடிகை தன்யா ரவிச்சந்திரன் ” ஒரு முறை ஒரு ரசிகர் ஒருவர் என்னிடம் என்னை நீங்கள் திருமணம் செய்துகொள்ள முடியுமா? அக்கா என்று “ கேட்டார். அந்த கேள்வியை கேட்டவுடன் எனக்கு ரொம்பவே அதிர்ச்சியாகிவிட்டது.

அந்த சமயம் எப்படி அவர் கேட்டதற்கு பதில் சொல்லவேண்டும் எப்படி முகத்தை வைத்துக்கொள்ள வேண்டும் என்று ஒன்றுமே புரியவில்லை. அக்கா என்று சொல்லிவிட்டு அவர் அப்படி கேட்டது எனக்கு ஒன்றுமே புரியவில்லை. என்னுடைய வாழ்க்கையில் நான் இந்த சம்பவத்தை மட்டும் மறக்கவே மாட்டேன். இதுபோன்ற வேடிக்கையான சம்பவங்களை நினைத்தால் சிரிப்புத்தான் வருகிறது” எனவும் தன்யா ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

Published by
murugan

Recent Posts

கனடா தேர்தல் : 22 பஞ்சாபியர்கள், 2 ஈழ தமிழர்கள் வெற்றி!

ஒட்டாவா : 343 தொகுதிகளை கொண்ட கனடா நாடாளுமன்றத்திற்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. அமெரிக்காவை போலவே கனடாவிலும் தேர்தல் வாக்கெடுப்பு…

21 minutes ago

2026ல் அதிமுகவுக்கு 6 இடங்கள் கூட கிடைக்காது -ஆர்.எஸ்.பாரதி காட்டம்!

சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் காவல்துறை, தீயணைப்புத்துறை மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது…

22 minutes ago

சீனா: உணவகத்தில் பயங்கர தீ விபத்து…22 பேர் பலி!

லியோனிங் : ஏப்ரல் 29 அன்று, சீனாவின் லியோனிங் மாகாணத்தில் உள்ள லியோயாங் நகரின் பைடா மாவட்டத்தில் (Baita District)…

54 minutes ago

பஹல்காம் தாக்குதல் : உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.50 லட்சம்…மஹாராஷ்டிரா முதல்வர் அறிவிப்பு!

காஷ்மீர் : மாநிலம் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர்…

1 hour ago

வைபவ் சூர்யவன்ஷிக்கு ரூ.10 லட்சம் பரிசு -பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் அறிவிப்பு!

ஜெய்ப்பூர் : நேற்றிலிருந்து இணையத்தளத்தில் ட்ரெண்டிங்கில் இருக்கும் ஒரு பெயர் என்றால் ராஜஸ்தான்  அணியின் இளம் வீரர் வைபவ் சூர்யவன்சி…

2 hours ago

கட்டாய கடன் வசூலித்தால் 3 ஆண்டுகள் சிறை! சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றம்!

சென்னை : கடந்த ஏப்ரல் 26 (திங்கள்) அன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன்…

2 hours ago